ஆளுமை:செல்லத்தம்பி, கந்தப்பன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்தம்பி
தந்தை கந்தப்பன்
தாய் குறிச்சிப்பிள்ளை
பிறப்பு 1935.03.27
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


செல்லத்தம்பி, கந்தப்பன் (1935.03.27 - ) மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த கலைஞர்; எழுத்தாளர். இவரது தந்தை கந்தப்பன்; தாய் குறிஞ்சிப்பிள்ளை. ஆரையூர் இளவல் என்ற புனைபெயரால் இவர் பலராலும் அறியப்பட்டார். இவர் தனது கல்வியை ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியாலயம், மட்டக்களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் உயர் கல்வியை நுகேகொட திறந்த பல்கலைக்கழகத்திலும் கற்றார். தொடர்ந்து 1952 தொடக்கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை நதிப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் பணியாற்றிய இவர், 1963.02.01 முதல் 1996.03.27 வரை கிராமசேவையாளராக (தரம் 01) பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.

1948ஆம் ஆண்டு அரசடி மகாவித்தியாலய மண்டபத்தில் இவரால் எழுதி, தயாரித்து, மேடையேற்றப்பட்ட ‘இராம இராச்சியம்’ எனும் நாடகமே இவரின் முதல் நாடகமாகும். இவர் தயாரித்துள்ள 85க்கும் மேற்பட்ட நாடகங்கள் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளன. சிவத்தைத் தேடும் சீலர்கள், குழந்தைக் குமரன், கற்பனை கடந்த ஜோதி, வினைதீர்க்கும் விநாயகன், பிட்டுக்கு மண் ஆகிய புரதான நாடகங்களையும் இராம இராச்சியம், இதய கீதம், நீறு பூத்த நெருப்பு, மானம் காத்த மாவீரன், நெஞ்சிருக்கும் வரை, பார்த்தசாரதி போன்ற இத்திகாச நாடகங்களையும் மேலும் பல இலக்கிய, வரலாற்று, சமூக நாடகங்களையும் இவர் எழுதி மேடையேற்றியுள்ளார். மேலும் விபுலானந்தர் வாழ்கின்றார், நீறு பூத்த நெருப்பு ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். 2007இல் இலங்கை அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான கலாபூசணம் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 85-93
  • நூலக எண்: 10511 பக்கங்கள் 03-05