ஆளுமை:கனகசுந்தரம்பிள்ளை, தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசுந்தரம்பிள்ளை, தம்பிமுத்து
தந்தை தம்பிமுத்து
பிறப்பு 1863
இறப்பு 1922
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

த. கனகசுந்தரம்பிள்ளை (1863 - 1922) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. இவர் கதிரைவேற்பிள்ளை, கணேச பண்டிதர் ஆகியோரிடத்தில் தமிழிலக்கண இலக்கியங்களும் ஆங்கிலமும் பயின்று பின் சென்னைக்கு சென்று செல்வ நாயக்கர் பாடசாலையிற் கல்வி பயின்று மத்திய படசாலைப் பரீட்சையில் சித்தி பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் எவ்.ஏ.வகுப்பில் சித்திபெற்று பிரெசிடென்சிக் கல்லூரியிலே கற்று கலைமாணி (B.A.)ப் பரீட்சையிலும் சித்தி அடைந்தார். தமிழ் நாவலர் சரிதம் எனும் நூலும் இல்லாணமை என்னும் நூலும் மேலும் சில நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 159-164
  • நூலக எண்: 4136 பக்கங்கள் 01-13
  • நூலக எண்: 963 பக்கங்கள் 71-73


வெளி இணைப்புக்கள்