"ஆளுமை:ஆறுமுகம், சேவுகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

04:58, 1 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஆறுமுகம்
தந்தை சேவுகன்
தாய் -
பிறப்பு 1969.04.24
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், சேவுகன் (1969.04.24-) கிளிநொச்சி, தருமபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சேவுகன். இவர் தனது ஆரம்பகல்வியையும், உயர்கல்வியையும் கிளி/தருமபுரம் மகா வித்தியாலயத்தில் கற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றினார்.

1990-1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'நிலாமுற்றம்', 'முழு நிலாக்கால ஒன்றுகூடல்கள்' எனும் பெயரில் இலக்கிய சந்திப்புக்களை ஒருங்கிணைத்து செயற்பட்டார். 2010 ஆம் ஆண்டு முதல் கண்டாவளை பிரதேச கலாசர செயற்பாடுகளுக்கு ஆதரவாகவும், கலாசார பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகவும், பிரதேச செயலக ரீதியாக இடம்பெறும் போட்டிகளுக்கு விடைத்தாள்களை மதிப்பிடும் குழுவில் ஒருவராகவும் செயற்பட்டு வருகிறார்.


வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 40-41