"ஆளுமை:பிலிப் நீக்கிலஸ், மாணிக்கத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=பிலிப் நீக்கிலஸ்|
 
பெயர்=பிலிப் நீக்கிலஸ்|
 
தந்தை= மாணிக்கத்தம்பி|
 
தந்தை= மாணிக்கத்தம்பி|

05:02, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பிலிப் நீக்கிலஸ்
தந்தை மாணிக்கத்தம்பி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிலிப் நீக்கிலஸ், மாணிக்கத்தம்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கத்தம்பி. இவர் 1947 இல் ஸ்ரூடியோ ஒன்றில் பங்காளராகச் சேர்ந்து பின்னர் அபிப்பிராய பேதத்தால் அதிலிருந்து விலகிச் சொந்தமாக 1950களில் 'செல்லம் ஸ்ரூடியோவை' நிறுவினார். இவர் முதன் முதலில் சென் பற்றிக் கல்லூரியில் தனது ஆசிரியரான கே.எஸ்.பி.செல்லத்துரையின் மகனின் தேவநற்கருணை பெறும் நிகழ்ச்சியைப் படம் எடுத்துப் பாராட்டுப் பெற்றார்.

யாழ்ப்பாணத்திற்கு அன்றைய வெள்ளைக்காரக் கவர்னர் சேர். அன்றூ கால்டிகொட் விஜயம் மேற்கொண்டிருந்த போது அவரை அன்னம் போல் அமைந்த அலங்காரப் படகொன்றில் ஊர்காவற்துறைக்கு அழைத்து சென்றார்கள். இதனை இவர் புகைப்படமாக்கினார். இப்புகைப்படமானது இலங்கையிலிருந்து வெளிவரும் 'ஸ்ரைம்ஸ் ஒவ் சிலோன் பத்திரிகையில் முழு உருவத்தில் முன் பக்கத்தில் வந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. இவரது புகைப்படக் கலையைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 153-155