"ஆளுமை:கோதண்டபாணி, விஸ்வலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=கோதண்டபாணி| | பெயர்=கோதண்டபாணி| | ||
தந்தை=விஸ்வலிங்கம்| | தந்தை=விஸ்வலிங்கம்| |
05:17, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கோதண்டபாணி |
தந்தை | விஸ்வலிங்கம் |
தாய் | இரத்தினம் |
பிறப்பு | 1920.03.20 |
இறப்பு | 1967 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோதண்டபாணி, விஸ்வலிங்கம் (1920.03.20 - 1967) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வாழ்விடமாகவும் கொண்ட நாதஸ்வரக் கலைஞன். இவரது தந்தை விஸ்வலிங்கம்; தாய் இரத்தினம். பரம்பரை வழியாக நாதஸ்வரம் இசைப்பதைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தின் வாரிசான இக்கலைஞன் தனது ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இந்துப் பாடசாலையில் கற்று வந்த காலத்தில் தனது மரபுவழிக் கலையான நாதஸ்வர இசையையும் கற்று வரலானார்.
இவர் கோதண்டபாணி நாதஸ்வர இசைக்குழு என்று தனது பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து ஈழநாட்டின் பலபாகங்களிலுமுள்ள இந்து ஆலயங்கள், மங்கள விழாக்கள், பொது விழாக்களில் தனது நாதஸ்வர இசையை ஆற்றுகைப்படுத்தி வந்தார். இவரது நாதஸ்வர வாசிப்பானது சுகமும் சுருதி லயமும் நிறைந்த சங்கதிகளை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 79
- நூலக எண்: 7474 பக்கங்கள் 61-63