"ஆளுமை:மன்ஸூர், எம். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மன்ஸூர், எம். எம். இவர் மாவனல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மாவனல்லை ஸஹிராவில் கல்வி கற்றார். மயுரபாத மகாவித்தியாலத்தில் ஒரு வருடம் சிங்களம் கற்ற இவர் தனது சிங்கள அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள எம்.ரி.எல். யூசுப் அலி ஆசிரியரிடம் சிங்கள இலக்கணத்தைக் கற்றார்.இந்தப்பயிற்சியின் பிற்காலத்தில் இவர் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தடம் பதித்துள்ளார்.
+
மன்ஸூர், எம். எம்.மாவனல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மாவனல்லை ஸஹிராக் கல்லூரியில் கற்று மயுரபாத மகா வித்தியாலத்தில் ஒரு வருடம் சிங்களம் கற்றதுடன் மேலும் சிங்கள அறிவை வளர்த்துக் கொள்ள எம்.ரி.எல். யூசுப் அலி ஆசிரியரிடம் சிங்கள இலக்கணத்தைக் கற்றத் தேறி மொழிபெயர்ப்புத் துறையில் தடம் பதித்துள்ளார்.
  
இவர் விவசாயத் திணைக்களத்தில் விவசாய அதிகாரியாக பணியாற்றியவர். இவர் இலங்கையின் பல்வேறு பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதி வந்துள்ளார். சிறுகதை, கவிதை, உருவகக் கதை, குட்டிக்கதை, குறுங்கதை, மொழிபெயர்ப்பு, போன்றவற்றில் ஈடுபாடு காட்டி எழுதியவர். இவரது நாடகங்கள் கவிதைகள் இலங்கை வானொலியின் முஸ்லிம் நிகழ்ச்சியின் ஒலிபரப்பப்பட்டுள்ளன. மாவனல்லை எம். எம். மன்ஸூர் என்ற பெயரிலும், தமிழ்வண்ணன் என்ற புனைபெயரிலும் இவர் எழுதி வந்துள்ளார்.
+
இவர் விவசாயத் திணைக்களத்தில் விவசாய அதிகாரியாகப் பணியாற்றியதுடன் இலங்கையின் பல்வேறு பத்திரிகைகளிலும் இதழ்களிலும் சிறுகதை, கவிதை, உருவகக் கதை, குட்டிக்கதை, குறுங்கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதி வந்துள்ளார். இவரது நாடகங்கள், கவிதைகள் இலங்கை வானொலியின் முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவர் மாவனல்லை எம். எம். மன்ஸூர், தமிழ்வண்ணன் போன்ற புனைபெயர்களில் எழுதி வந்துள்ளார்.
  
இவர் 1971ஆம் ஆண்டு மாவனல்லை எழுத்தாளர் மன்றம் என்ற பெயரில் 'எழுத்தாளர் மன்றம்' ஒன்றினை அமைத்து இலக்கியக் கருத்தரங்குகளையும், கலந்துரையாடல்களையும், வாரம் ஓர் இலக்கியச் சொற்பொழிவுகளையும் நடத்தி வந்ததோடு பாடசாலையில் "செங்கரும்பு" என்ற பெயரில் தான் ஆசிரியராக நின்று இலக்கியச் சஞ்சிகை ஒன்றினையும் நடத்தி வந்துள்ளார். டாக்டர் திரு. ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் சஞ்சிகை,  டொமினிக் ஜீவாவின் மல்லிகை, க. பரணீதரனின் ஜீவநதி, படிகள் சஞ்சிகைகள், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.  
+
இவர் 1971 ஆம் ஆண்டு ''மாவனல்லை எழுத்தாளர் மன்றம்'' அமைத்து அதனூடாக இலக்கியக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், வாரம் ஒரு இலக்கியச் சொற்பொழிவுகளை நடாத்தி வந்ததோடு, பாடசாலையில் "செங்கரும்பு" என்ற இலக்கியச் சஞ்சிகையைத் தான் ஆசிரியராக நின்று நடாத்தி வந்துள்ளார். இவர் டாக்டர் திரு. ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் சஞ்சிகை,  டொமினிக் ஜீவாவின் மல்லிகை, க. பரணீதரனின் ஜீவநதி, படிகள் சஞ்சிகைகள், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.  
  
நூல் விமர்சனங்களுடன் சிறுவர் இலக்கியத்திலும் ஆர்வம் காட்டி வருவதனால் இவர் எழுதிய "குள்ளன்" என்ற சிறுவர் கதை(நாவல்) நூல் 2011ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் அனுசரணையுடன் பாடசாலை நூலகப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.இவர் 2010ஆம் ஆண்டு அரச சாகித்திய கலாசார விழாவில் கலாபூஷண விருதைப்பெற்றுள்ளார்.
+
இவர் நூல் விமர்சனங்கள், சிறுவர் இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இவர் எழுதிய "குள்ளன்" என்ற சிறுவர் கதை (நாவல்) நூல் 2011 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் அனுசரணையுடன் பாடசாலை நூலகப் புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. இவர் 2010 ஆம் ஆண்டு அரச சாகித்திய கலாச்சார விழாவில் கலாபூஷண விருதைப் பெற்றுள்ளார்.
  
  

00:09, 27 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மன்ஸூர்
பிறப்பு
ஊர் மாவனல்லை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மன்ஸூர், எம். எம்.மாவனல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மாவனல்லை ஸஹிராக் கல்லூரியில் கற்று மயுரபாத மகா வித்தியாலத்தில் ஒரு வருடம் சிங்களம் கற்றதுடன் மேலும் சிங்கள அறிவை வளர்த்துக் கொள்ள எம்.ரி.எல். யூசுப் அலி ஆசிரியரிடம் சிங்கள இலக்கணத்தைக் கற்றத் தேறி மொழிபெயர்ப்புத் துறையில் தடம் பதித்துள்ளார்.

இவர் விவசாயத் திணைக்களத்தில் விவசாய அதிகாரியாகப் பணியாற்றியதுடன் இலங்கையின் பல்வேறு பத்திரிகைகளிலும் இதழ்களிலும் சிறுகதை, கவிதை, உருவகக் கதை, குட்டிக்கதை, குறுங்கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதி வந்துள்ளார். இவரது நாடகங்கள், கவிதைகள் இலங்கை வானொலியின் முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவர் மாவனல்லை எம். எம். மன்ஸூர், தமிழ்வண்ணன் போன்ற புனைபெயர்களில் எழுதி வந்துள்ளார்.

இவர் 1971 ஆம் ஆண்டு மாவனல்லை எழுத்தாளர் மன்றம் அமைத்து அதனூடாக இலக்கியக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், வாரம் ஒரு இலக்கியச் சொற்பொழிவுகளை நடாத்தி வந்ததோடு, பாடசாலையில் "செங்கரும்பு" என்ற இலக்கியச் சஞ்சிகையைத் தான் ஆசிரியராக நின்று நடாத்தி வந்துள்ளார். இவர் டாக்டர் திரு. ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் சஞ்சிகை, டொமினிக் ஜீவாவின் மல்லிகை, க. பரணீதரனின் ஜீவநதி, படிகள் சஞ்சிகைகள், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இவர் நூல் விமர்சனங்கள், சிறுவர் இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இவர் எழுதிய "குள்ளன்" என்ற சிறுவர் கதை (நாவல்) நூல் 2011 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் அனுசரணையுடன் பாடசாலை நூலகப் புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. இவர் 2010 ஆம் ஆண்டு அரச சாகித்திய கலாச்சார விழாவில் கலாபூஷண விருதைப் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15217 பக்கங்கள் 3-7
  • நூலக எண்: 8834 பக்கங்கள் 09
  • நூலக எண்: 15217 பக்கங்கள் 03-07
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மன்ஸூர்,_எம்._எம்.&oldid=190487" இருந்து மீள்விக்கப்பட்டது