"ஆளுமை:கெங்காதரக்குருக்கள், இ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=கெங்காதரக்குருக்கள் | + | பெயர்=கெங்காதரக்குருக்கள்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | கெங்காதரக் குருக்கள், இ அனலைதீவைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் சமயப் பெரியார். இவர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் புங்குடுதீவு மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்ற காலத்தில் சைவ சமயம், தமிழ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார். காலஞ்சென்ற சைவப் பெரியார் வ.பசுபதிப்பிள்ளை அவர்களால் நடத்தப்பட்ட வேதாகமப் பாடசாலையிலும் சமஸ்கிருத மொழியையும் இதர கோவில் கிரியைகளையும் கற்றுச் சீரிய புலமைப் பெற்றார். | |
− | இவர் | + | இவர் 1970 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய அர்ச்சகராகப் பதவி ஏற்றுச் சிறிது காலத்தில் ஆச்சார்ய அபிஷேகம் செய்யப்பெற்றுக் குருக்கள் பட்டம் பெற்றார். இவரிடத்தில் காணப்பட்ட பக்தி, அட்சரசுத்தியுடன் கூடிய உச்சரிப்பு, சங்கீத ஞானம், பேச்சு வன்மை, அம்பாளை அலங்காரம் செய்யும் திறமை ஆகியன இவரது உயர்வுக்குக் காரணமாயின. |
− | முனீஸ்வரம் சண்டிகா ஹோம | + | முனீஸ்வரம் சண்டிகா ஹோம விழாவுக்குச் சென்று பங்குப்பற்றிய அனுபவத்தால் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் சண்டிகா ஹோம விழாவினைத் தாமே முன்னின்று நடத்திப் பெருமை பெற்றார். மாரியம்மன் கோவிலில் மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கோவில்களில் மகோற்சவ குருவாகக் கடமையாற்றிப் பெருமை பெற்றதோடு ஆலய கட்டட நிதிக்குப் பெருந்தொகை பணத்தை வழங்கியதன் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கினார். சில வருடங்கள் மலேஷியா சென்று குவாந்தன் நகரிலுள்ள ஶ்ரீ முத்துமாரி ஆலய பிரதம குருவாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|132}} | {{வளம்|11649|132}} |
01:06, 8 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கெங்காதரக்குருக்கள் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கெங்காதரக் குருக்கள், இ அனலைதீவைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் சமயப் பெரியார். இவர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் புங்குடுதீவு மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்ற காலத்தில் சைவ சமயம், தமிழ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார். காலஞ்சென்ற சைவப் பெரியார் வ.பசுபதிப்பிள்ளை அவர்களால் நடத்தப்பட்ட வேதாகமப் பாடசாலையிலும் சமஸ்கிருத மொழியையும் இதர கோவில் கிரியைகளையும் கற்றுச் சீரிய புலமைப் பெற்றார்.
இவர் 1970 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய அர்ச்சகராகப் பதவி ஏற்றுச் சிறிது காலத்தில் ஆச்சார்ய அபிஷேகம் செய்யப்பெற்றுக் குருக்கள் பட்டம் பெற்றார். இவரிடத்தில் காணப்பட்ட பக்தி, அட்சரசுத்தியுடன் கூடிய உச்சரிப்பு, சங்கீத ஞானம், பேச்சு வன்மை, அம்பாளை அலங்காரம் செய்யும் திறமை ஆகியன இவரது உயர்வுக்குக் காரணமாயின.
முனீஸ்வரம் சண்டிகா ஹோம விழாவுக்குச் சென்று பங்குப்பற்றிய அனுபவத்தால் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் சண்டிகா ஹோம விழாவினைத் தாமே முன்னின்று நடத்திப் பெருமை பெற்றார். மாரியம்மன் கோவிலில் மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கோவில்களில் மகோற்சவ குருவாகக் கடமையாற்றிப் பெருமை பெற்றதோடு ஆலய கட்டட நிதிக்குப் பெருந்தொகை பணத்தை வழங்கியதன் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கினார். சில வருடங்கள் மலேஷியா சென்று குவாந்தன் நகரிலுள்ள ஶ்ரீ முத்துமாரி ஆலய பிரதம குருவாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 132