"ஆளுமை:கானமூர்த்தி, கோதண்டபாணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கோ.கானமூர்த்தி (1945.01.03 - 2008.09.26) யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த ஓர் நாதஸ்வர கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி.  இவர் நாதஸ்வர பயிற்சியை 14 ஆவது வயதில் தனது மாமனார் நாராயணசாமி அவர்களிடமும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் கற்றார். தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல பாகங்களிலும் நாதஸ்வரக் கச்சேரிகளை நடத்தினார்.  
+
வி. கே. கானமூர்த்தி (1945.01.03 - 2008.09.26) யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி; தாய் இராஜேஸ்வரி.  இவர் நாதஸ்வர பயிற்சியை 14 ஆவது வயதில் தனது மாமனார் நாராயணசாமி அவர்களிடமும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் கற்றார். தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல பாகங்களிலும் நாதஸ்வரக் கச்சேரிகளை நிகழ்த்தினார்.  
  
1989ஆம் ஆண்டு இலங்கை கம்பன் கழகம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இருவருக்கும் வெள்ளிவிழா கொண்டாடியது. மேலும் இவர்களுக்கு ''நாதஸ்வர இசைமணி'', ''ஸ்வரநாதஜோதி'', ''நாதகானபூபதி'', ''நாதஸ்வரகானவரிதி'' எனப் பல பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சர்வதேச இந்துமத குருபீடத்தினால் ''இசைஞான கலாநிதி'' என்னும் பட்டம் வழங்கப்பட்ட இவருக்கு 2001ஆம் ஆண்டு வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் விவகாரங்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அமைச்சு என்பன இணைந்து ''கலைஞானகேசரி'' என்னும் பட்டமும், 2006ஆம் ஆண்டு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலாபூஷணம்'' விருதும் வழங்கப்பட்டுள்ளது.
+
1989ஆம் ஆண்டு இலங்கை கம்பன் கழகம் யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இருவருக்கும் வெள்ளிவிழா கொண்டாடியது. இவர்களது கலைஞானத்திற்காக ''நாதஸ்வர இசைமணி'', ''ஸ்வரநாதஜோதி'', ''நாதகானபூபதி'', ''நாதஸ்வரகானவாரிதி'' எனப் பல கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு சர்வதேச இந்துமத குருபீடத்தினால் ''இசைஞான கலாநிதி'' என்னும் பட்டமும் வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் விவகாரங்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அமைச்சு என்பன இணைந்து ''கலைஞானகேசரி'' என்னும் பட்டமும், 2006ஆம் ஆண்டு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலாபூஷணம்'' விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

23:07, 14 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கானமூர்த்தி, வி. கே.
தந்தை கோதண்டபாணி
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு 1948.09.10
இறப்பு 2008.09.26
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி. கே. கானமூர்த்தி (1945.01.03 - 2008.09.26) யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி; தாய் இராஜேஸ்வரி. இவர் நாதஸ்வர பயிற்சியை 14 ஆவது வயதில் தனது மாமனார் நாராயணசாமி அவர்களிடமும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் கற்றார். தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல பாகங்களிலும் நாதஸ்வரக் கச்சேரிகளை நிகழ்த்தினார்.

1989ஆம் ஆண்டு இலங்கை கம்பன் கழகம் யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இருவருக்கும் வெள்ளிவிழா கொண்டாடியது. இவர்களது கலைஞானத்திற்காக நாதஸ்வர இசைமணி, ஸ்வரநாதஜோதி, நாதகானபூபதி, நாதஸ்வரகானவாரிதி எனப் பல கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு சர்வதேச இந்துமத குருபீடத்தினால் இசைஞான கலாநிதி என்னும் பட்டமும் வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் விவகாரங்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அமைச்சு என்பன இணைந்து கலைஞானகேசரி என்னும் பட்டமும், 2006ஆம் ஆண்டு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 566
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 104


வெளி இணைப்புக்கள்