"ஆளுமை:மைதிலி, உதயசங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மைதிலி அருளையா, ஆளுமை:மைதிலி, உதயசங்கர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:27, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மைதிலி, உதயசங்கர்
தந்தை அருளையா
தாய் சிவகாமசுந்தரி
பிறப்பு 1973
ஊர் புங்குடுதீவு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மைதிலி, உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. இவர் வேம்படி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர். இவர் OMNI-II தொலைக்காட்சிச் சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார்.

1980களின் இறுதியில் எழுதத் தொடங்கிய இவர், திசை வாரவெளியீட்டின் மூலம் அறிமுகமானார். இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 136 பக்கங்கள் 3
  • நூலக எண்: 11649 பக்கங்கள் 251

வெளி இணைப்புக்கள்