"ஆளுமை:சிவகுருநாதன், கனகசபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவகுருநாதன், கனகசபை (1920.12.20 - 2013.01.13)  யாழ்ப்பாணம், புலோப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர்; சமூக சேவையாளர். இவரது தந்தை கனகசபை; தாய் சேதுப்பிள்ளை. இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1940ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலையில் இணைந்து 1943ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி வவுனியாவில் தனது பணியை ஆரம்பித்தார். செட்டிக்குளம், மன்னார், மத்துகமை, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆசிரியப்பணி தொடர்ந்த இவர் 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறும்வரை உடுத்துறை மகாவித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். 1950ஆம் ஆண்டில் பண்டிதர் பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார்.
+
சிவகுருநாதன், கனகசபை (1920.12.20 - 2013.01.13)  யாழ்ப்பாணம், புலோப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர், சமூக சேவையாளர். இவரது தந்தை கனகசபை; இவரது தாய் சேதுப்பிள்ளை. இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1940 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலையில் இணைந்து 1943 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி வவுனியாவில் தனது பணியை ஆரம்பித்தார். செட்டிக்குளம், மன்னார், மத்துகமை, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆசிரியப்பணியைத் தொடர்ந்த இவர் சேவையிலிருந்து இளைப்பாறும் வரை (1971- 1978 வரை)  உடுத்துறை மகா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். 1950 ஆம் ஆண்டில் பண்டிதர் பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார்.
  
இவர் கசின் எனும் புனைபெயரில் 1946ஆம் ஆண்டில் இலக்கியத்துறையில் புகுந்த இவரது முதலாவது ஆக்க இலக்கியமான “வண்டியில் வளர்ந்த கதை” தொடர் நாவலாக 1947ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியானது. சகட யோகம், இராசமணிச் சகோதரிகள், இதய ஊற்று, தேடிவந்த செல்வம், கற்பகம், நிதானபுரி, சொந்தக்காரன், கண்டெடுத்த கடிதங்கள் என பல நாவல்களையும் மணியோசை, நூலும் நூற்கயிறும், இது காதலல்ல, பச்சைக் கிளி, சிலந்தி வலை, தமிழன்தான், வனசஞ்சாரம் முதலான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
+
இவர் கசின் என்னும் புனைபெயரில் 1946 ஆம் ஆண்டில் இலக்கியத்துறையில் புகுந்தார். இவரது முதலாவது ஆக்கமான “வண்டியில் வளர்ந்த கதை” 1947 ஆம் ஆண்டில் ஈழகேசரியில் தொடர் நாவலாக வெளியானது. சகட யோகம், இராசமணிச் சகோதரிகள், இதய ஊற்று, தேடிவந்த செல்வம், கற்பகம், நிதானபுரி, சொந்தக்காரன், கண்டெடுத்த கடிதங்கள் எனப் பல நாவல்களையும் மணியோசை, நூலும் நூற்கயிறும், இது காதலல்ல, பச்சைக் கிளி, சிலந்தி வலை, தமிழன்தான், வனசஞ்சாரம் முதலான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
  
இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு இலக்கியப் பேரவை யாழ் மண்ணில் விழா எடுத்து இவரைக் கெளவித்ததொடு, கொழும்பு தமிழ்ச்சங்கம் 1999ஆம் ஆண்டு நடாத்திய புலவர், வித்துவான்கள் மாநாட்டில் "இயற்றமிழ் வித்தகர்" என்ற பட்டத்தையும், 2000ஆம் ஆண்டு அரச கலாசாரத் திணைக்களம் "கலாபூசணம்" விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.
+
1994 ஆம் ஆண்டு இலக்கியப் பேரவை யாழ் மண்ணில் விழா எடுத்த போது இவரைக் கெளரவித்ததோடு, 1999 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய புலவர், வித்துவான்கள் மாநாட்டில் "இயற்றமிழ் வித்தகர்" என்ற பட்டத்தையும் 2000 ஆம் ஆண்டு அரச கலாச்சாரத் திணைக்களம் "கலாபூசணம்" விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==

23:03, 16 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவகுருநாதன்
தந்தை கனகசபை
தாய் சேதுப்பிள்ளை
பிறப்பு 1920.12.20
இறப்பு 2013.01.13
ஊர் புலோப்பளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுருநாதன், கனகசபை (1920.12.20 - 2013.01.13) யாழ்ப்பாணம், புலோப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர், சமூக சேவையாளர். இவரது தந்தை கனகசபை; இவரது தாய் சேதுப்பிள்ளை. இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1940 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலையில் இணைந்து 1943 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி வவுனியாவில் தனது பணியை ஆரம்பித்தார். செட்டிக்குளம், மன்னார், மத்துகமை, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆசிரியப்பணியைத் தொடர்ந்த இவர் சேவையிலிருந்து இளைப்பாறும் வரை (1971- 1978 வரை) உடுத்துறை மகா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். 1950 ஆம் ஆண்டில் பண்டிதர் பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார்.

இவர் கசின் என்னும் புனைபெயரில் 1946 ஆம் ஆண்டில் இலக்கியத்துறையில் புகுந்தார். இவரது முதலாவது ஆக்கமான “வண்டியில் வளர்ந்த கதை” 1947 ஆம் ஆண்டில் ஈழகேசரியில் தொடர் நாவலாக வெளியானது. சகட யோகம், இராசமணிச் சகோதரிகள், இதய ஊற்று, தேடிவந்த செல்வம், கற்பகம், நிதானபுரி, சொந்தக்காரன், கண்டெடுத்த கடிதங்கள் எனப் பல நாவல்களையும் மணியோசை, நூலும் நூற்கயிறும், இது காதலல்ல, பச்சைக் கிளி, சிலந்தி வலை, தமிழன்தான், வனசஞ்சாரம் முதலான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு இலக்கியப் பேரவை யாழ் மண்ணில் விழா எடுத்த போது இவரைக் கெளரவித்ததோடு, 1999 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய புலவர், வித்துவான்கள் மாநாட்டில் "இயற்றமிழ் வித்தகர்" என்ற பட்டத்தையும் 2000 ஆம் ஆண்டு அரச கலாச்சாரத் திணைக்களம் "கலாபூசணம்" விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 68-70
  • நூலக எண்: 13943 பக்கங்கள் 125-135
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 67-70