"ஆளுமை:பரமேஸ்வரன், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=பரமேஸ்வரன் | + | பெயர்=பரமேஸ்வரன்| |
தந்தை=சுப்பிரமணியம்| | தந்தை=சுப்பிரமணியம்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | பரமேஸ்வரன், சுப்பிரமணியம் (1944.08.02 - 1983.07.21) யாழ்ப்பாணம், புத்தூரைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குப் பட்டப் படிப்பிற்காகத் தெரிவு செய்யப்பட்ட இவர், அங்கு தனது இலக்கியச் செயற்பாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தி வந்தார். | |
− | பல்கலைக்கழக வெளியீடாக வந்த மூன்றாவது சிறுகதைத் தொகுதியான ”காலத்தின் குரல்கள்” என்ற தொகுப்பின் ஆசிரியராக | + | இவர் பல்கலைக்கழக வெளியீடாக வந்த மூன்றாவது சிறுகதைத் தொகுதியான ”காலத்தின் குரல்கள்” என்ற தொகுப்பின் ஆசிரியராக இருந்ததோடு, பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான ”இளங்கதிர்” சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். இவரது ஆளுமை மிக்க செயற்பாடு அவருக்குப் பல பதவிகளைப் பெற்றுக் கொடுத்தது. இவர் 1969 -1972 காலப்பகுதி வரை தேசிய சேமிப்பு வங்கியின் மேற்பார்வையாளராகவும் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் முகாமையாளராகவும் பின்னர் செயலாற்று முகாமையாளராகவும் பதவி வகித்தார். |
− | + | தமிழ்க் கலைமாணி சிறப்புப் பட்டமும் தமிழ் முதுகலைமாணி பட்டமும் பெற்றுள்ள இவர், வானொலிக் கலைஞனாக, நல்லதோர் எழுத்தாளனாக, ஆற்றல்மிகு நாடகக் கலைஞனாக, திறமைசார் ஆய்வாளனாக விளங்கிய காரணத்தால் ''கலா பரமேஸ்வரன் ” என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. ''நச்சினார்க்கினியாரின் இலக்கியத் திறனாய்வு” என்னும் ஆய்வினை மேற்கொண்டு முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவரின் ஆய்வுக் கட்டுரை இவர் இறந்த பின்னர் 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு சேலம் குயில்பண்ணை வெளியீட்டகத்தால் நூலாக வெளியிடப்பட்டது. | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
06:27, 16 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பரமேஸ்வரன் |
தந்தை | சுப்பிரமணியம் |
பிறப்பு | 1944.08.02 |
இறப்பு | 1983.07.21 |
ஊர் | புத்தூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரமேஸ்வரன், சுப்பிரமணியம் (1944.08.02 - 1983.07.21) யாழ்ப்பாணம், புத்தூரைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குப் பட்டப் படிப்பிற்காகத் தெரிவு செய்யப்பட்ட இவர், அங்கு தனது இலக்கியச் செயற்பாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தி வந்தார்.
இவர் பல்கலைக்கழக வெளியீடாக வந்த மூன்றாவது சிறுகதைத் தொகுதியான ”காலத்தின் குரல்கள்” என்ற தொகுப்பின் ஆசிரியராக இருந்ததோடு, பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான ”இளங்கதிர்” சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். இவரது ஆளுமை மிக்க செயற்பாடு அவருக்குப் பல பதவிகளைப் பெற்றுக் கொடுத்தது. இவர் 1969 -1972 காலப்பகுதி வரை தேசிய சேமிப்பு வங்கியின் மேற்பார்வையாளராகவும் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் முகாமையாளராகவும் பின்னர் செயலாற்று முகாமையாளராகவும் பதவி வகித்தார்.
தமிழ்க் கலைமாணி சிறப்புப் பட்டமும் தமிழ் முதுகலைமாணி பட்டமும் பெற்றுள்ள இவர், வானொலிக் கலைஞனாக, நல்லதோர் எழுத்தாளனாக, ஆற்றல்மிகு நாடகக் கலைஞனாக, திறமைசார் ஆய்வாளனாக விளங்கிய காரணத்தால் கலா பரமேஸ்வரன் ” என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. நச்சினார்க்கினியாரின் இலக்கியத் திறனாய்வு” என்னும் ஆய்வினை மேற்கொண்டு முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவரின் ஆய்வுக் கட்டுரை இவர் இறந்த பின்னர் 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு சேலம் குயில்பண்ணை வெளியீட்டகத்தால் நூலாக வெளியிடப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 56