"ஆளுமை:துரைராஜா, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=துரைராஜா|
 
பெயர்=துரைராஜா|
 
தந்தை=கணபதிப்பிள்ளை|
 
தந்தை=கணபதிப்பிள்ளை|

00:55, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் துரைராஜா
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1927.10.29
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராஜா, கணபதிப்பிள்ளை (1927.10.29 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் 1959 இல் வட இலங்கை சங்கீத சபையினரின் பரீட்சையில் சித்தியடைந்து சங்கீத தராதரப் பத்திரம் பெற்றார். பின்னர் இந்தியா சென்று வெங்கட் இராமையாவிடமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கர்நாடக சங்கீதத்தினை 5 ஆண்டுகள் கற்று இசைமணி என்ற பட்டம் பெற்றார்.

இவர் 1962 இல் இலங்கை திரும்பி மாதனையில் தமிழிசைச் சங்கத்தினை நிறுவி அதனூடாக 20 வருடங்களாக இசை விழாக்களை நடாத்தி வந்துள்ளார். இவர் தனது 72 ஆவது வயதிலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவில் கோபாலகிருஷ்ண பாரதியார் விழாவிலும் சிதம்பர நாவலர் பாடசாலை, யாழ்ப்பாணம் இரசிக ரஞ்சனி சபா முதலான பல இடங்களிலும் இசை விழாக்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 70-71