"ஆளுமை:ரிம்ஸா, முஹம்மத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை1|
+
{{ஆளுமை|
 
பெயர்=ரிம்ஸா|
 
பெயர்=ரிம்ஸா|
 
தந்தை=முஹம்மத்|
 
தந்தை=முஹம்மத்|
 
தாய்=லரீபா|
 
தாய்=லரீபா|
பிறப்பு=1978.04.20|
+
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=மாத்தறை|
 
ஊர்=மாத்தறை|
வரிசை 23: வரிசை 23:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D ரிம்ஸா முஹம்மத் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D ரிம்ஸா முஹம்மத் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1673|28-31}}
 
{{வளம்|1673|28-31}}
 
{{வளம்|1029|15}}
 
{{வளம்|1029|15}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

00:30, 26 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் ரிம்ஸா
தந்தை முஹம்மத்
தாய் லரீபா
பிறப்பு
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 - ) மாத்தறை, வெலிகமவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை முஹம்மத்; தாய் லரீபா. இவர் வரகாப்பொலை பாபுல் ஹஸன் மத்திய மகா வித்தியாலயம், வெலிகம அறபா தேசியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராகத் தொழில் புரிந்து வந்துள்ளார். கவிதாயினி வெலிகம ரிம்ஸா, வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் ஆகிய புனைபெயர்களில் எழுதிவருகின்றார்.

இவர் 1998 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது முதலாவது ஆக்கமான ‘சமாதானமே வா’ சூரியன் FM இல் இடம்பெற்றதிலிருந்து 180 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 25 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது நேர்காணல்கள், ஆக்கங்கள் மித்திரன் வாரமலர், நேத்ரா அலைவரிசையில் உதய தரிசனம், எங்கள் தேசம், தினகரன் வாரமஞ்சரியில் செந்தூரம் இதழ், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி போன்ற இந்திய, இலங்கைப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியுள்ளார். சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக (2004 - 2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்தும் நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார். DAN தொலைக்காட்சியில் 2011.03.23 அன்று இவரது நேர்காணல் இடம் பெற்றது.

இவர் வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு, தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது BEST QUEEN FOUNDATION என்ற இலக்கிய அமைப்பின் தலைவராக இருக்கும் இவர் 'பூங்காவனம்' காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் சேவையாற்றி வருகின்றார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் ஆகிய இலக்கிய அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றார்.

இவருக்கு இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 28-31
  • நூலக எண்: 1029 பக்கங்கள் 15
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரிம்ஸா,_முஹம்மத்&oldid=408751" இருந்து மீள்விக்கப்பட்டது