"ஆளுமை:மேமன்கவி, அப்துல் கரீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=மேமன்கவி|
 
பெயர்=மேமன்கவி|
 
தந்தை=அப்துல் கரீம்|
 
தந்தை=அப்துல் கரீம்|
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1957.04.29|
 
பிறப்பு=1957.04.29|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=மட்டக்குளி, கொழும்பு|
+
ஊர்=கொழும்பு, மட்டக்குளி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
மேமன்கவி (1957.04.29 - ) கொழும்பு, மட்டக்குளியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். அப்துல் ராசக் லாகான் என்பது இவரது இயற்பெயர். கொண்ட இவரது தந்தை அப்துல் கரீம். இவர் இந்தியாவிலுள்ள மேமன் சமூகத்தை சேர்ந்தவர். தனது சமூகத்தின் அடையாளமாக மேமன்கவி என்ற பெயரை சூட்டிக்கொண்டார். மேமன் மொழி எழுத்துருவற்ற காரணத்தால் தமிழில் கல்வியை பயின்ற இவர் எட்டாம் வகுப்புடன் இவர் தனது பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டார்.  பின்னர் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையிலும் சமூகவிஞ்ஞானத் துறையிலும் டிப்ளோமா தரத்தைப் பெற்றுக்கொண்டார்.
+
மேமன்கவி, அப்துல் கரீம் (1957.04.29 - ) கொழும்பு, மட்டக்குளியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரது இயற்பெயர் அப்துல் ராசக் லாகான் என்பதாகும். இவரது தந்தை அப்துல் கரீம். இவர் இந்தியாவிலுள்ள மேமன் சமூகத்தைச் சேர்ந்தவர். தனது சமூகத்தின் அடையாளமாக மேமன்கவி என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். மேமன் மொழி எழுத்துருவற்ற காரணத்தால் தமிழில் கல்வியைப் பயின்ற இவர், எட்டாம் வகுப்புடன் பாடசாலைக் கல்வியை முடித்ததுடன் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையிலும் சமூகவிஞ்ஞானத் துறையிலும் டிப்ளோமா தரத்தைப் பெற்றுக்கொண்டார்.
  
இவரது முதலாவது கவிதை 1974 ஆம் ஆண்டு சுதந்திரன் இதழில் "தமிழே என் மூச்சு" எனும் தலைப்பில் வெளிவந்தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைத்துக்கொண்டு பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டதோடு பல இதழ்களுக்கு ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், ருஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. யுகராகங்கள், ஹிரோசிமாவின் ஹீரோக்கள், இயந்திர சூரியன், மீண்டும் வசிப்பதற்காக, உனக்கு எதிரான வன்முறை (கட்டுரைத் தொகுப்பு), மொழி வேலி கடந்து (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.  
+
இவரது முதலாவது கவிதையான "தமிழே என் மூச்சு" சுதந்திரன் இதழில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டதோடு பல இதழ்களுக்கு ஆசிரியராகவும் உதவி ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கின்றார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், ருஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் யுகராகங்கள், ஹிரோசிமாவின் ஹீரோக்கள், இயந்திர சூரியன், மீண்டும் வசிப்பதற்காக, உனக்கு எதிரான வன்முறை (கட்டுரைத் தொகுப்பு), மொழி வேலி கடந்து (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.  
  
இவரது "நாளைய நோக்கிய இன்றில்" என்ற கவிதைத் தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றதோடு, "உனக்கு எதிரான வன்முறை" இலங்கை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளது. 1990ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சின் இலக்கிய வித்தகர் விருதையும், இஸ்லாமிய கலாசார அமைச்சின் கவித்தாரகை விருதையும் இவர் பெற்றுள்ளார்.
+
இவரது "நாளைய நோக்கிய இன்றில்" என்ற கவிதைத் தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றதோடு, "உனக்கு எதிரான வன்முறை" என்ற நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளது. இவர்  1990 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் விருதையும் இஸ்லாமியக் கலாச்சார அமைச்சின் கவித்தாரகை விருதையும் பெற்றுள்ளார்.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 26: வரிசை 26:
 
{{வளம்|13958|146-150}}
 
{{வளம்|13958|146-150}}
 
{{வளம்|3785|}}
 
{{வளம்|3785|}}
 +
{{வளம்|8833|03-04}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

00:27, 26 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் மேமன்கவி
தந்தை அப்துல் கரீம்
பிறப்பு 1957.04.29
ஊர் கொழும்பு, மட்டக்குளி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மேமன்கவி, அப்துல் கரீம் (1957.04.29 - ) கொழும்பு, மட்டக்குளியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரது இயற்பெயர் அப்துல் ராசக் லாகான் என்பதாகும். இவரது தந்தை அப்துல் கரீம். இவர் இந்தியாவிலுள்ள மேமன் சமூகத்தைச் சேர்ந்தவர். தனது சமூகத்தின் அடையாளமாக மேமன்கவி என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். மேமன் மொழி எழுத்துருவற்ற காரணத்தால் தமிழில் கல்வியைப் பயின்ற இவர், எட்டாம் வகுப்புடன் பாடசாலைக் கல்வியை முடித்ததுடன் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையிலும் சமூகவிஞ்ஞானத் துறையிலும் டிப்ளோமா தரத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவரது முதலாவது கவிதையான "தமிழே என் மூச்சு" சுதந்திரன் இதழில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டதோடு பல இதழ்களுக்கு ஆசிரியராகவும் உதவி ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கின்றார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், ருஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் யுகராகங்கள், ஹிரோசிமாவின் ஹீரோக்கள், இயந்திர சூரியன், மீண்டும் வசிப்பதற்காக, உனக்கு எதிரான வன்முறை (கட்டுரைத் தொகுப்பு), மொழி வேலி கடந்து (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவரது "நாளைய நோக்கிய இன்றில்" என்ற கவிதைத் தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றதோடு, "உனக்கு எதிரான வன்முறை" என்ற நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளது. இவர் 1990 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் விருதையும் இஸ்லாமியக் கலாச்சார அமைச்சின் கவித்தாரகை விருதையும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 146-150
  • நூலக எண்: 3785 பக்கங்கள்
  • நூலக எண்: 8833 பக்கங்கள் 03-04