"ஆளுமை:ஸதக்கா, ஏ. ஜி. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ஸதக்கா, ஏ. ஜி. எம். |
 
பெயர்=ஸதக்கா, ஏ. ஜி. எம். |
 
தந்தை=|
 
தந்தை=|

03:33, 4 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஸதக்கா, ஏ. ஜி. எம்.
பிறப்பு 1970
இறப்பு 2011.08.20
ஊர் வாழைச்சேனை
வகை கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸதக்கா, ஏ. ஜி. எம். ( 1970 - 2011.08.20) வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவர் சிஷ்யன் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவர் வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து ஓர் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். இவர் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றியதோடு இளந்தளிர், மின்னல், அந்நஜா, The Post ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் யாத்ரா சஞ்சிகையின் துணையாசிரியராகவும் பணியாற்றியவராவார்.

இவர் இமைக்குள் ஓர் இதயம், போர்க்காலப் பாடல்கள் முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் 1999 இல் சென்னையில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தை ஸ்தாபித்தவர். 2002 இல் கொழும்பில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த ஸதக்கா அம்மாநாட்டில் வெளியிட்ட "மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்" என்னும் கவிதைத் தொகுதியின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராவார். இவர் லேக்ஹவுஸ் பத்திரிகையில் கல்குடாப் பிராந்தியச் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 16541 பக்கங்கள் 31
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஸதக்கா,_ஏ._ஜி._எம்.&oldid=196966" இருந்து மீள்விக்கப்பட்டது