"ஆளுமை:கைலாசநாதக் குருக்கள், கார்த்திகேயக் குருக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கைலாசநாதக் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கைலாசநாதக் குருக்கள், கா., [[ஆளுமை:கைலாசநாதக் குருக்கள், கார்த்திகேயக் கு...)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கைலாசநாதக் குருக்கள், கா. |
+
பெயர்=கைலாசநாதக் குருக்கள் |
தந்தை=|
+
தந்தை=கார்த்திகேயக் குருக்கள்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1921.08.15|
இறப்பு=|
+
இறப்பு=2000.08.07|
ஊர்=|
+
ஊர்=நல்லூர்|
 
வகை=ஆய்வாளர்|
 
வகை=ஆய்வாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
கைலாசநாதக் குருக்கள் ஓர் ஆய்வாளர். சமஸ்கிருதம் மட்டுமன்றித் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், பாளி ஆகிய மொழிகளிலும் பயிற்சி பெற்றவர். நல்லூர் சிவன் கோயிலை நிறுவியவர். கொழும்பு, பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.  
+
கைலாசநாதக்குருக்கள், கார்த்திகேயக் குருக்கள் (1921.08.15 - 2000.08.07) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஆய்வாளர். இவரது தந்தை பெயர் கார்த்திகேயக் குருக்கள். இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் 1948 ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். பின் பூனே பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார். இவர் ஆங்கிலம், தமிழ், இலத்தீன், பாளி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவராகவும் ஜேர்மன், பிரெஞ்சு மொழிகள் தெரிந்தவராகவும் காணப்பட்டார்.  
+
 
 +
மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் முதலாவது தலைவராகவும் கலைப்பீடத்தின்  இணைப்பீடாதிபதியாக  ஜூன் 1976 தொடக்கம் டிசம்பர் 1978 வரையில் பணியாற்றியதோடு இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
 +
 
 +
இவர் சம்ஸ்கிருத இலகுபோதம், வடமொழி இலக்கிய வரலாறு (இலங்கை சாகித்திய விருது பெற்ற நூல்), சைவத் திருக்கோயிற் கிரியைநெறி, இந்துப் பண்பாடு சில சிந்தனைகள் போன்ற நூல்களை ஆக்கியுள்ளார். 1982 ஆம் ஆண்டு கொழும்பு கலை இலக்கியப் பத்திரிகை நண்பர்கள் இவரின் கலை- இலக்கியச் சேவைகளையும் சைவத்திற்கு இவர் ஆற்றிய தொண்டையும் கெளரவித்து மணிவிழா எடுத்தனர். 1993 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு இவருக்கு 'வேதாகம மாமணி' என்ற விருதை வழங்கியதோடு 1998 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கெளரவ இலக்கியக் கலாநிதிப் பட்டத்தை வழங்கியுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|279|03-05}}
 
{{வளம்|279|03-05}}
 
{{வளம்|342|iii}}
 
{{வளம்|342|iii}}
 +
{{வளம்|7571|64}}
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் கைலாசநாதக் குருக்கள்]
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் கைலாசநாதக் குருக்கள்]

04:33, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கைலாசநாதக் குருக்கள்
தந்தை கார்த்திகேயக் குருக்கள்
பிறப்பு 1921.08.15
இறப்பு 2000.08.07
ஊர் நல்லூர்
வகை ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசநாதக்குருக்கள், கார்த்திகேயக் குருக்கள் (1921.08.15 - 2000.08.07) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஆய்வாளர். இவரது தந்தை பெயர் கார்த்திகேயக் குருக்கள். இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் 1948 ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். பின் பூனே பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார். இவர் ஆங்கிலம், தமிழ், இலத்தீன், பாளி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவராகவும் ஜேர்மன், பிரெஞ்சு மொழிகள் தெரிந்தவராகவும் காணப்பட்டார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் முதலாவது தலைவராகவும் கலைப்பீடத்தின் இணைப்பீடாதிபதியாக ஜூன் 1976 தொடக்கம் டிசம்பர் 1978 வரையில் பணியாற்றியதோடு இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் சம்ஸ்கிருத இலகுபோதம், வடமொழி இலக்கிய வரலாறு (இலங்கை சாகித்திய விருது பெற்ற நூல்), சைவத் திருக்கோயிற் கிரியைநெறி, இந்துப் பண்பாடு சில சிந்தனைகள் போன்ற நூல்களை ஆக்கியுள்ளார். 1982 ஆம் ஆண்டு கொழும்பு கலை இலக்கியப் பத்திரிகை நண்பர்கள் இவரின் கலை- இலக்கியச் சேவைகளையும் சைவத்திற்கு இவர் ஆற்றிய தொண்டையும் கெளரவித்து மணிவிழா எடுத்தனர். 1993 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு இவருக்கு 'வேதாகம மாமணி' என்ற விருதை வழங்கியதோடு 1998 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கெளரவ இலக்கியக் கலாநிதிப் பட்டத்தை வழங்கியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 279 பக்கங்கள் 03-05
  • நூலக எண்: 342 பக்கங்கள் iii
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 64

வெளி இணைப்புக்கள்