"ஆளுமை:நவரெத்தினம், சிதம்பரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நவரெத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:08, 29 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நவரெத்தினம்
தந்தை சிதம்பரப்பிள்ளை
தாய் பொன்னு
பிறப்பு 1948.07.01
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவரெத்தினம், சிதம்பரப்பிள்ளை (1948.07.01 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிதம்பரபிள்ளை; தாய் பொன்னு. இவர் வல்வெட்டி இந்து கலவன் பாடசாலை, அமெரிக்க மிஷன் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தொடர்ந்து 1982 பெப்ரவரி 15இல் பட்டதாரி ஆசிரியராக இவர் திருகோணமலை, ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம் உட்பட வேறு பல பாடசாலைகளில் கடமையாற்றியுள்ளார்.

1967இல் இவரது முதற் படைப்பான சுடர் விளக்கு ஜோதியில் வெளியானது. 1969இல் திருகோணமலை ஈழநாடு பத்திரிகை நிருபராக இவர் கடமையாற்றியுள்ளார். முதன் முதலில் ஈழத்து நவீன மேடை நாடகங்கள் பற்றிய தொகுப்பைச் செய்தவர் இவரேயாவார். மேலும் திருகோணமலை கலை, இலக்கியத் தலைவராக விளங்கும் இவரால் திருகோணமலை இலக்கிய வரலாற்று எனும் நூல் வெளியிட்டப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 13390 பக்கங்கள் 04-06