"ஆளுமை:குணேஸ்வரன், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குணேஸ்வரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:46, 23 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் குணேஸ்வரன்
தந்தை சுப்பிரமணியம்
தாய் கமலாதேவி
பிறப்பு
ஊர் தொண்டைமானாறு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


குணேஸ்வரன், சுப்பிரமணியம் யாழ்ப்பாணம் தொண்டமானாற்றைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்: தாய் கமலாதேவி. இவர் துவாரகன் என்ற புனைப்பெயரால் பலராலும் அறியப்பட்டார். இவர் ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க. பொ. த. உயர்தரத்தை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தையும் பெற்று யாழ்ப்பாணம் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவரது மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் என்ற கவிதைத் தொகுப்பும் அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை என்ற தலைப்பில் கட்டுரைகளும் புனைவும் புதிதும், புனைவும் புதிதும் ஆகிய ஆய்வு கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. மேலும் அம்மா, வெளிநாட்டுக் கதைகள், கிராமத்து வாசம், பாட்டிமார் கதைகள், கதை கதையாம் ஆகிய நூல்களை தொகுத்தும் வெளியிட்டுள்ளார்.

மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் என்ற கவிதைத் தொகுப்புக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான வடமாகாண இலக்கிய விருதையும் அதே ஆண்டில் இலங்கை இலக்கியப் பேரவையால் வழங்கப்படும் கவிஞர் ஐயாத்துரை விருதையும் இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4696 பக்கங்கள் 32