"ஆளுமை:பஞ்சாட்சர சர்மா, சபாபதி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 21: வரிசை 21:
 
{{வளம்|1027|19-23}}
 
{{வளம்|1027|19-23}}
 
{{வளம்|1028|07-10}}
 
{{வளம்|1028|07-10}}
 +
{{வளம்|2057|25}}

04:48, 16 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பஞ்சாட்சர சர்மா
தந்தை சபாபதி ஐயர்
பிறப்பு 1916.11.13
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரசர்மா, சபாபதி ஐயர் (1916.11.13 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சபாபதி ஐயர். இவர் தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய் ஜம்புகேஸ்வரக் குருக்களிடத்தில் கோவிற் பாடசாலையில் பெற்ற பின் சுன்னாகம் பிராசீன பாடசாலையில் வித்துவான் சி. கணேசையரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். 1933ஆம் ஆண்டில் பிரவேச பண்டித பரீட்சையில் சித்தி பெற்றார். அத்துடன் சமஸ்கிருத மொழியையும் கற்றுக்கொண்டார். ஆசிரியராக பணியாற்றிய இவர் இந்து சமய பாடநூல் எழுதியும் இந்தியாவிலிருந்து வடமொழிப் பரீட்சை நடத்தும் பிரபல ஸ்தாபனங்கள் மூலம் சமஸ்கிருத பரீட்சைகள் நடத்தியும் வந்தார்.

1939ஆம் ஆண்டில் இலங்கை விகடன் பத்திரிகை மூலம் எழுத்துலகில் பிரவேசித்த இவர் ஈழகேசரி, ஆனந்தன், கலைச்செல்வி, நவசக்தி, வீரசக்தி, கலாமோகினி, பாரததேவி, காந்தியம், ஈழநாடு முதலான வெளியீடுகளில் வடகோவைவாணன், பரம், நச்சினாக்கினியன், பாரத்ஜென், வாத்தியார், அக்ஷ்ரம், இரட்டையர்கள் முதலான புனைபெயர்களில் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புக்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

இவர் பல வடமொழி நூல்களின் பதிப்பாசிரியராகவும், மூன்று பாராட்டு விழா மலர்களுக்கு தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளதோடு வானொலிப் பேச்சுக்கள், சைவநற்சிந்தனைகளை வழங்கியுள்ளார். இவர் சிவானந்த குருகுலத்தினரால் 'துவிபாஷா துரந்தரர்' என்ற பட்டம் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 36-39
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 66-69
  • நூலக எண்: 1027 பக்கங்கள் 19-23
  • நூலக எண்: 1028 பக்கங்கள் 07-10
  • நூலக எண்: 2057 பக்கங்கள் 25