"ஆளுமை:திருஞானசம்பந்தன், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pirapakar, ஆளுமை:சம்பந்தன் பக்கத்தை ஆளுமை:திருஞானசம்பந்தன், கந்தையா என்ற தலைப்புக்கு வழிமாற்று ...) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07 ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் | + | திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07 ) சம்பந்தன் என்ற பெயரில் நன்கறியப்பட்ட எழுத்தாளர். யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சின்னத்தம்பி கந்தையா; தாய் இராசமணி. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்று பின் தமிழாசிரியராக ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். |
− | தனது இருபத்தைந்தாவது வயதில் | + | இவர் தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத ஆரம்பித்தார். 1939இல் கலைமகள் சஞ்சிகையில் இவரது "தாராபாய்" என்ற சிறுகதை வெளியானது. சுமார் 20 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவை கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது 10 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சம்பந்தன் சிறுகதைகள் (1998) எனும் தொகுப்பாக வெளிவந்தது. மேலும் 6 சிறுதைகள் தேடிச் சேர்க்கப்பட்டு துறவு எனும் பெயரில் 2004 இல் வெளியானது. |
− | இவரது | + | இவரது 'பாசம்' என்ற நாவல் ஈழகேசரியில் 30 அத்தியாயங்களாக வெளிவந்தது. ''சாகுந்தல காவியம்'' என்ற கவிதை நூலையும் ஆக்கியுள்ளார். ஏழு காவிய மகளிர் பற்றிய இலக்கியக்கட்டுரைகளைக் கொண்ட தர்மவதிகள் என்ற நூலும் வெளியாகியுள்ளது. சம்பந்தன் நினைவாக யாழ் இலக்கிய வட்ட அனுசரணையுடன் ஆண்டுதோறும் சிறந்த ஆய்வு நூலுக்கான ”சம்பந்தன் விருது” வழங்கப்பட்டு வருகிறது. |
==வெளி இணைப்பு== | ==வெளி இணைப்பு== |
09:45, 8 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | திருஞானசம்பந்தன் |
தந்தை | கந்தையா |
தாய் | இராசமணி |
பிறப்பு | 1913.10.20 |
இறப்பு | 1955.01.07 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | எழுத்தாளர், கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07 ) சம்பந்தன் என்ற பெயரில் நன்கறியப்பட்ட எழுத்தாளர். யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சின்னத்தம்பி கந்தையா; தாய் இராசமணி. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்று பின் தமிழாசிரியராக ஆசிரியப் பணியில் ஈடுபட்டார்.
இவர் தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத ஆரம்பித்தார். 1939இல் கலைமகள் சஞ்சிகையில் இவரது "தாராபாய்" என்ற சிறுகதை வெளியானது. சுமார் 20 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவை கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது 10 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சம்பந்தன் சிறுகதைகள் (1998) எனும் தொகுப்பாக வெளிவந்தது. மேலும் 6 சிறுதைகள் தேடிச் சேர்க்கப்பட்டு துறவு எனும் பெயரில் 2004 இல் வெளியானது.
இவரது 'பாசம்' என்ற நாவல் ஈழகேசரியில் 30 அத்தியாயங்களாக வெளிவந்தது. சாகுந்தல காவியம் என்ற கவிதை நூலையும் ஆக்கியுள்ளார். ஏழு காவிய மகளிர் பற்றிய இலக்கியக்கட்டுரைகளைக் கொண்ட தர்மவதிகள் என்ற நூலும் வெளியாகியுள்ளது. சம்பந்தன் நினைவாக யாழ் இலக்கிய வட்ட அனுசரணையுடன் ஆண்டுதோறும் சிறந்த ஆய்வு நூலுக்கான ”சம்பந்தன் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
வெளி இணைப்பு
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 17-20