"ஆளுமை:வித்தியானந்தன், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 26: வரிசை 26:
 
{{வளம்|15444|49}}
 
{{வளம்|15444|49}}
 
{{வளம்|15515|04-06}}
 
{{வளம்|15515|04-06}}
 +
{{வளம்|16357|250-256}}

01:40, 22 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வித்தியானந்தன்
தந்தை சுப்பிரமணியம்
தாய் முத்தம்மா
பிறப்பு 1924.05.08
இறப்பு 1989.01.21
ஊர் தெல்லிப்பளை
வகை எழுத்தாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வித்தியானந்தன், சுப்பிரமணியம் (1924.05.08 - 1989.01.21) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர்; கல்வியியலாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் முத்தம்மா. வீமன்காமம் தமிழ் பாடசாலையில் தொடக்கக் கல்வியையும் பின்னர் தெல்லிப்பளை ஒன்றியக் கல்லூரி, பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்ததோடு இவர் இலங்கைப் பல்கலைக்கழக்தில் சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோரிடமும் கற்றுத் தேர்ந்தார். இங்கு தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்று இலண்டனில் முனைவர் பட்டமும் பெற்றார். 1977 இல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராகவும் அதன் பின்னர் ஜனவரி 1979 இல் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தராகவும் கடமையாற்றினார்.

இவர் ஈழத்தமிழ்த் தேசியத்தின் அடியாதாரமாக அமையத்தக்க நாட்டார் இலக்கியத்தையும் நாட்டுப்புறக் கலையையும் தேடித்தொகுத்துத் தேசியப் பண்பு சார்ந்து வடிவப்படுத்தினார். இவரது நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் "பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்' என்று பெயரிடப்பட்டது.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 284 பக்கங்கள் 01-50
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 49
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 04-06
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 250-256