"ஆளுமை:ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஆ. மு. ஷரிபுத்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்)  சி (Gopi, ஆளுமை: ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ. பக்கத்தை ஆளுமை:ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ. என்ற தலைப்புக்கு வ...)  | 
				|
(வேறுபாடு ஏதுமில்லை) 
 | |
08:04, 25 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | ஜின்னாஹ் ஷரிபுத்தீன் | 
| தந்தை | ஆ. மு. ஷரிபுத்தீன் | 
| பிறப்பு | |
| ஊர் | மருதமுனை | 
| வகை | கவிஞர், எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ. மருதமுனையை சேர்ந்த மரபுக் கவிஞர்; எழுத்தாளர். இவரது தந்தை ஆ.மு.ஷரிபுத்தீன். தனது தந்தையிடம் கவிதை இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் அதன் துணை தலைவராகவும் சர்வதேச இஸ்லாமிய கலைக் கழகத்தின் இலங்கை கிளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
எஸ். டி. சிவநாயகம் அவர்களின் தினபதி கவிதா பண்ணையில் அறிமுகமான இவர் பல கவிதை நூல்களையும் காப்பியங்களையும் படைத்துள்ளார். இவர் எழுதிய பண்டார வன்னியன் காவியம்" 2005ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டல விருதினை பெற்றுள்ளதோடு 'பெற்ற மனம்' எனும் சிறுகதை தொகுப்பு கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவரது கவியாற்றலுக்காய் கலாபூஷணம், தமிழ் மாமணி, கவி மாமணி, காவியத் தலைவன், நற்கவிஞர், காப்பியக்கோ போன்ற கெளரவங்களைப் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்பு
வளங்கள்
- நூலக எண்: 13958 பக்கங்கள் 217-219