"ஆளுமை:தமிழோவியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=தமிழோவியன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:28, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | தமிழோவியன் |
| பிறப்பு | |
| இறப்பு | 2006.12.25 |
| ஊர் | தெளிவத்தை, பதுளை |
| வகை | கவிஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ரங்கன் ஆறுமுகம் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழோவியன் (2006.12.25 - ) பதுளை, தெளிவத்தையைச் சேர்ந்த கவிஞர். ஊவா மாகாணத்தில் பல இலக்கிய விழாக்களையும் நாடகங்களையும் இளமைக் காலத்திலிருந்தே நடத்தி வந்தவர்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் இவர் கவிஞர் கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்றவர்களை பதுளைக்கு அழைத்து இலக்கிய விழாக்களை நடத்தினார்.
கரும்புத் தோட்டத்தில் பெண்கள் படும் வேதனைகளையும், மலையகத்தொழிலாளர்கள் படும் அவலங்களையும் இவரது கவிதைகளில் எடுத்துக்காட்டியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்றுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 88-93