"ஆளுமை:பொன்மணி, குலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=பொன்மணி குல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:49, 12 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பொன்மணி குலசிங்கம் |
தந்தை | பொன்னு செல்லையா |
பிறப்பு | 1928.08.18 |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கு. பொன்மணி (1928.08.18 - ) ஓர் இசைக் கலைஞர். இவர் தனது ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்தரக் கல்வி வரை பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் கல்லூரியில் பயின்று பாடசாலை படிப்பை முடித்துக் கொண்டு இசை கற்ப்பதற்காகச் சென்னை சென்று அங்குள்ள கலாட்ஷேத்திரவில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் சங்கீத சிரோன்மணி பட்டத்தையும், கலாட்ஷேத்திராவின் வாய்ப்பட்டுக்கான முதற்தர டிப்ளோமாச் சான்றிதழையும் பெற்றார். இவர் தனது பதினான்காவது வயதிலேயே தனது இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடிகியாக விளங்கினார்.
1956ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர் படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாளர், மேலதிகப் பணிப்பாளர், பணிப்பாளர் என்ற நிலையை எய்தினார். வர்த்தக சேவையை இரவு 11 மணி வரை நீடிக்கச் செய்தவர் இவரேயாவார். புகழ் பெற்ற இசையமைப்பாளர் முத்துசாமி தலமையில் இவர் இயங்கிய குழு இலங்கைப் பாடகர்களை வைத்து தயரித்த ஈழத்துப் படல்கள் பெரும் வரவேற்ப்பைப் பெற்றன. இப் பாடல் நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் வானொலி ஒலிபர்ப்புக்காகச் கொள்வனவு செய்தது.
வளங்கள்
- நூலக எண்: 1950 பக்கங்கள் 09-16