"ஆளுமை:பாலசிங்கம், கதிரைவேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலசிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:22, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலசிங்கம், கதிரைவேற்பிள்ளை
தந்தை கதிரைவேற்பிள்ளை
பிறப்பு 1876.06.23.
இறப்பு 1952.09.04
ஊர் உடுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. பாலசிங்கம் (1876.06.23 - 1952.09.04) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிரைவேற்பிள்ளை. யாழ்ப்பாணக் கல்லூரி, மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் பின்னர் சட்டக் கல்வியை முடித்து கொழும்பில் வழக்கறிஞராகவும், பின்னர் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.

இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இரண்டாவது தமிழ் உறுப்பினராக 1914 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். 1924 ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரானார். இலங்கையில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, சுதேச மருத்துவமனை, அரசு அடைமான வங்கி போன்ற சேவைகள் ஆரம்பிப்பதற்கு இவர் மூல காரணமாக விளங்கினார். நாட்டின் பழைய வரலாற்றாராய்ச்சியிலும் ஈடுபட்டு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியதோடு இவர் நாட்டு மொழிகளின் வயிலாகவே அரசட்சியலுவல்களை நடாத்துதல் வேண்டும் என்னும் கருத்தினை 1931ஆம் ஆண்டிலேயே வெளியிட்டவர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 171-172


வெளி இணைப்புக்கள்