"ஆளுமை:சுப்பையா, ஏரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சுப்பையா, ஏ.|
+
பெயர்=சுப்பையா, ஏரம்பு|
 
தந்தை=கதிர்காமர் ஏரம்பு|
 
தந்தை=கதிர்காமர் ஏரம்பு|
 
தாய்=கங்கமுத்து|
 
தாய்=கங்கமுத்து|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பையா, ஏ. (ஜனவரி 13, 1922 - ஜனவரி 11 1976) இலங்கையின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரும் ஆசிரியரும் ஆவார். கொக்குவில் கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர். யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்தவர்.ஏரம்பு சுப்பையாவின் தந்தை யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாகக் கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். ஏரம்பு அவர்கள் தனது மகனான சுப்பையா அவர்களை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.
+
ஏ.சுப்பையா (ஜனவரி 13, 1922 - ஜனவரி 11 1976) யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமர் ஏரம்பு; தாய் கங்கமுத்து. இவர் பரதம், கதகளி ஆகிய நடனத்துறையில் பேராற்றல் பெற்று இருபத்தேழு வருடங்கள் நதனத்துறையில் தடம்பதித்ததோடு முதலாவது அரச நியமனம் பெற்ற நடன ஆசான் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
  
 +
 +
இவர் ஆரம்பத்தில் தனது பரம்பரையின் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாகக் கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். பின்னர் இவரது தந்தையார் இவரை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.
 +
 +
இந்திய திரைப்படமான சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடனமாடியுள்ளார். 1960ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற கலை, கலாசார விழாவில் ஏழு கலைஞர்கள் ஒவ்வொரு துறைக்காக கௌரவிக்கப்பட்டார்கள். அந் நிகழ்வில் நடனத்துறைக்காக  இவர் அப்போதிருந்த யாழ்ப்பாண அரச அதிபர் ம.சிறீகாந்தா அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு இவருக்கு ''கலைச்செல்வன்'', ''அபிநய அரசகேசரி'' போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டன.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

00:06, 19 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுப்பையா, ஏரம்பு
தந்தை கதிர்காமர் ஏரம்பு
தாய் கங்கமுத்து
பிறப்பு 1922.01.13
இறப்பு 1976.01.11
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏ.சுப்பையா (ஜனவரி 13, 1922 - ஜனவரி 11 1976) யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமர் ஏரம்பு; தாய் கங்கமுத்து. இவர் பரதம், கதகளி ஆகிய நடனத்துறையில் பேராற்றல் பெற்று இருபத்தேழு வருடங்கள் நதனத்துறையில் தடம்பதித்ததோடு முதலாவது அரச நியமனம் பெற்ற நடன ஆசான் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.


இவர் ஆரம்பத்தில் தனது பரம்பரையின் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாகக் கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். பின்னர் இவரது தந்தையார் இவரை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.

இந்திய திரைப்படமான சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடனமாடியுள்ளார். 1960ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற கலை, கலாசார விழாவில் ஏழு கலைஞர்கள் ஒவ்வொரு துறைக்காக கௌரவிக்கப்பட்டார்கள். அந் நிகழ்வில் நடனத்துறைக்காக இவர் அப்போதிருந்த யாழ்ப்பாண அரச அதிபர் ம.சிறீகாந்தா அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு இவருக்கு கலைச்செல்வன், அபிநய அரசகேசரி போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டன.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 334-335


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுப்பையா,_ஏரம்பு&oldid=162078" இருந்து மீள்விக்கப்பட்டது