"ஆளுமை:தங்கலட்சுமி, செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=தங்கலட்சும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:13, 13 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தங்கலட்சுமி செல்லத்துரை |
பிறப்பு | 1935.10.29 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தங்கலட்சுமி செல்லத்துரை (1935.10.29 - ) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கவிஞர். இவர் யாழ் இந்து மகளிர் இடைநிலைக் கல்வியைப் பயின்று பின்னர் இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீதத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். இசைக் கச்சேரிகள் மட்டுமல்லாது வீணைன் இசை மீட்பதிலும் வல்லவராக இவர் விளங்குகின்றார். ஐம்பது, அறுபது, எழுபது, எண்பதுகளில், பல இசைவிழாக்கள், ஆலய விழாக்களில் பங்குபற்றி சிறந்த சாஸ்திர இசை பாடகியாகத் திகழ்ந்துள்ளார்.
தென்மராட்சி, யழ்ப்பாணம், கொழும்பு, அனுராதபுரம் ஆகிய இடங்களில் தனது இசைக்கச்சேரியைப் பரவலாக செய்திருக்கும் இவர் யாழ்ப்பாணம் ரசிகரஞ்சனசபா அரங்கில் தனது முதலாவது அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். பின்னல் கோலாட்டம் எனும் நிகழ்ச்சியை யாழ்ப்பாண மண்ணில் இவரே அறிமுகப்படுத்தியவராவார். 2005ஆம் ஆண்டு இளங்கலைஞர் மண்டபத்தில் நல்லூர் கலாசாரப் பேரவை இவரின் கலைச் சேவையைப் பாராட்டி கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 92