"ஆளுமை:தணிகாசலம், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தணிகாசலம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:30, 7 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தணிகாசலம், கந்தையா
தந்தை கந்தையா
பிறப்பு
இறப்பு 1946.09.28
ஊர் அச்சுவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.தணிகாசலம் ( - 1976.09.28) யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கந்தையா. இவர் யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் சிரேஸ்ட தராதர வகுப்பு வரை பயின்று கல்லூரிப் படிப்பை இடைநிறுத்திக் கொண்டார். இதன் பின்னர் ஈழத்து இலக்கிய உலகில் கால் பதித்த இவர் சிறுகதை, கவிதைகளை பத்திரிகையில் எழுதி வராலானார். தேசிய கலை, இலக்கியப் பேரவையின் இணைச் செயலாளராக 1974ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருத இவர் தனது பதினெட்டாவது வயதில் இருந்து இலக்கியப் பணி ஆற்றி பலரின் நன்மதிப்பைப் பெற்றுள்ள ”தாயகம்” என்னும் ஈழத்துச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

”கணிகையன்” என்ற புனைபெயரில் இவரது வேலிகள், அகதி, நாய்களோ, பிரம்படி முதலான நல்ல சிறுகதைகளை ஈழத்து வாசகர்கள் முன் படைத்து அளித்துள்ள ”பிரம்படி” என்னும் சிறுகதைத்தொகுதி 1988ம் ஆண்டில் சென்னை புக்ஸ் சென்ரரின் வெளியீடாக வெளிவந்தது. இவரால் எழுதப்பட்ட மற்றொரு சிறுகதைத் தொகுதியான ”கதை முடியுமா” தொகுதி 1995ம் ஆண்டு சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் சென்ரரின் வெளியீடாகப் பிரசுரமானது. இது தவிர இவரால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு நூல் 2002ம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக வெளி வந்தது என்பதும் குறிப்பிடத்தகது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 58


வெளி இணைப்புக்கள்