"ஆளுமை:இராசரெத்தினம், கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இராசரெத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:11, 18 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராசரெத்தினம், கணபதிப்பிள்ளை |
தந்தை | கணபதிப்பிள்ளை |
தாய் | ராசம்மா |
பிறப்பு | 1923.07.02 |
ஊர் | ஆரையம்பதி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணபதிப்பிள்ளை இராசரெத்தினம் கிழக்கு மாகாணத்தின் ஆரையம்பதியில் கணபதிப்பிள்ளை, ராசம்மா தம்பதியரின் மகனாக 1923 ஜூலை, 02ம் திகதி பிறந்தார். இவர் ஆரையம்பதி இராமகிருஷ்ண பாடசாலையிலும், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.
இவர் உணவுக்கட்டுப்பாடு இலாகா உழியராகவும், திருகோணமலை கடற்படைத்தள எழுது வினைஞராகவும், மட்டக்களப்பு கச்சேரியில் எழுதுவினைஞராகவும், அம்பறை கமத்தொழில் சேவைப்பகுதி எழுதுவினைஞராகவும், மட்டக்களப்பு கூட்டுறவு காரியாலயத்திலும் பணியாற்றி இளைப்பாறினார்.
1980ல் தினகரன், வீரகேசரி, சிவநெறி பத்திரிகைகள் மூலம் எழுத்துலகில் நுழைந்த இவர் சமய அமைப்புக்களிலும் பணி செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 113-115