"ஆளுமை:நாகமுத்துப் புலவர், தனுக்கோடிபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நாகமுத்துப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:49, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நாகமுத்துப் புலவர் |
தந்தை | தனுக்கோடிபிள்ளை |
தாய் | சேதுநாயகி |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
காரைநகரிலே வேலாயுதர் தனுக்கோடிபிள்ளைக்கும் கந்தப்பர் சேதுநாயகிக்கும் தவப்பெரும் தனிப்புதல்வனாகப் பிறந்து சிறியதாயாரின் பராமரிப்பில் வளர்ந்தவர் நாகமுத்துப் புலவர். சிறுவயதில் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் படித்தவர் இலக்கியப் படிப்பினை நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளையிடம் கற்றறிந்தவர்.
இவர் பள்ளிக்கூட ஆசிரியராக 35 ஆண்டுகள் கற்பித்தமையால் நாகமுத்துச் சட்டம்பியார் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலேயே கற்பித்தவர்.
நூற்றுக்கு மேற்பட்ட கவிகளை இயற்றிய இவர் அவை யாவற்றையும் அடக்கி திருமங்கலவாழ்த்துச் சீட்டுக்கவித்திரட்டு என்ற நூலை உருவாக்கி 1914ல் வெளியிட்டுள்ளார். காரைநகர் திண்ணபுர சுந்தரேசர் திருப்பதிகம், திருவூஞ்சல், எச்சரிக்கை, பராக்கு, கலிகால வேடிக்கைக்கும்மி, மலாய் நாட்டு மனோரஞ்சிதக் கும்மி என்பன இவராற் பாடப்பட்டனவாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 281-282