"ஆளுமை:பேரின்பநாதன், ஆ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=பேரின்பநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=பேரின்பநாதன், ஆ. | + | பெயர்=பேரின்பநாதன், ஆ.| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=1944 | + | பிறப்பு=1944| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| |
00:01, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பேரின்பநாதன், ஆ. |
பிறப்பு | 1944 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வைத்தியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆ.பேரின்பநாதன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்று மருத்துவப் பட்டங்களையும் முதுமானிப் பட்டங்களையும் பெற்று உள்ளக பயிற்சியை களுபோவில வைத்தியசாலையில் பெற்று வைத்தியரானார்.
இவர் முதலில் 1970ஆம் ஆண்டு பருத்திதுறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் வைத்திய நலன் பேண் அதிகாரியாக நியமனம் பெற்றார். பின் அங்கொட முல்லேரியா வைத்தியசாலையில் மனநலம் நரம்பு நோய் சத்திர சிகிச்சைப் பற்றிய விசேட பயிற்சி பெற்று 1982ஆம் ஆண்டு பரிபாலகராக பதவி உயர்வு பெற்று ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இந்தியப்படையின் அடிபாடு, விமானத்தாக்குதல்கள் போன்றவற்றில் காயமடைந்தார்களுக்கு சிகிச்சை அளித்தார். 2004ஆம் ஆண்டு தொடக்கம் தனது மருத்துவ மனையின் கிளைகளை அல்லைப்பிட்டியிலும் மண்டைதீவிலும் நிறுவி பொதுமக்களுக்கு வைத்திய சேவை செய்தார்.
இவர் செய்த சமயப் பணிகளில் முக்கியமானது அடியார்களின் உதவியுடன் ஒருகோடி ரூபாவுக்கு மேல் செலவு செய்து பாணாவிடை சிவன் கோவில் புனர்நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்ததாகும். அத்தோடு பல கும்பாபிஷேக மலர்களையும் தொகுத்துள்ளார். சரித்திரம் சம்பந்தமாக பல தேடல்களை செய்து வரும் இவர் இராவணன் காலத்திலிருந்து இயக்கர் நாகர் காலம் வரை இலங்கை திராவிட நாடாகவே திகழ்ந்தது என்பதற்காக பல சான்று நூல்களை தேடி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 228-229