"ஆளுமை:அருணகிரி, வாதவூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pirapakar, ஆளுமை:அருணகிரி வாதவூர் பக்கத்தை ஆளுமை:அருணகிரி, வாதவூர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:41, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அருணகிரி, வாதவூர் |
தந்தை | வாதவூர் |
தாய் | அன்னப்பிள்ளை |
பிறப்பு | 1927.04.26 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வாதவூர் அருணகிரி (1927 ஏப்ரல், 26. )அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர் . இடைநிலைக் கல்விவரை வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்று நல் மாணாக்கராக திகழ்ந்தார். பின்னர் தனது மாமனாரின் வழியில் வியாபாரத்தை ஆரம்பித்து வேலணையிலிருந்து புகையிலையை கொள்வனவு செய்து வறக்காபொலவில் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்.
இவர் சுமார் 40 வருட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிங்கள, முஸ்லீம் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். சான்றாக முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கா, நீதி அமைச்சர் நிஸங்க விஜயரத்தின ஆகியோர் அருணகிரியின் நெருங்கிய நண்பர்கள் என்பதோடு அருணகிரியின் தாய், தந்தையரது மரணச்சடங்கிலும் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரி அவர்கள் வேலணை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர்.
அகில இலங்கை சமாதான நீதவானாகவும் அரசாங்கத்தால் நியமனம் பெற்றவர். சைவ சமயத்தில் அளவில்லா பற்று கொண்ட இவர் வேலணையில் உள்ள ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கியதுடன், வேலணை மக்களுக்காக வீதி புனரமைப்பு, மின்சார வசதியை பெற்று கொடுத்தல் போன்ற பல சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 453-457