"ஆளுமை:கந்தையா, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

22:33, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தையா அம்பலவாணர்
தந்தை அம்பலவாணர்
தாய் இராசம்மா
பிறப்பு
இறப்பு 1963.06.
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர் கந்தையா அவர்கள் வேலணை, வங்களாவடியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பை மேற்கொண்டு கணிதத்தை சிறப்புப் பாடமாக பயின்று சித்தி எய்தினார். சட்டத்துரையில் ஈடுபாடு கொண்ட இவர் கொழும்பு சட்டக்கல்லூரியில் அதை நிறைவுசெய்தார். சட்ட நுணுக்கங்களில் தேர்ந்த இவர் தமிழர்களுக்கு மட்டுமன்றி தென்னிலங்கை மக்களுக்கும் மிகவும் வசதி படைத்த இந்திய வர்த்தகருக்கும் சட்ட ஆலோசகராக விளங்கி பெரும் புகழ் பெற்றார். இலங்கையில் முதன் முறையாக சிலப்பதிகார விழாவை 1954ஆம் ஆண்டு புங்குடுதீவின் தெற்குக்கடலோரமாக அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 1955ஆம் ஆண்டு வேலணையில் திருமுறை மகாநாட்டை நடாத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவற்றுடன் 1947, 1952 ஆகியா ஆண்டுகளிலிடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 481-491

வெளி இணைப்புக்கள்