"ஆளுமை:துரைசுவாமி, வைத்தியலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=துரைசுவாமி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:23, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | துரைசுவாமி வைத்தியலிங்கம் |
தந்தை | வைத்தியலிங்கம் |
தாய் | கதிராசிப்பிள்ளை |
பிறப்பு | 1874.06.08 |
இறப்பு | 1966 |
ஊர் | வேலணை |
வகை | அரசியற்துறைப் பெரியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இலங்கை வரலாற்றில் அழியாத இடம் பிடித்துள்ள தலைவர்களில் துரைசுவாமி வைத்தியலிங்கமும் ஒருவராவார். இவர் நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர், தேசாபிமானி, சைவாபிமானி, சிறந்த வழக்கறிஞர், சமூகத் தொண்டன், கல்வி கூடங்கள் பலவற்றின் தாபகர், சைவ வித்தியா விருத்திச் சங்கம், சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாண சங்கம் ஆகிய நிறுவனங்களின் தலைவர் போன்ற பல்வேறு கோணங்களில் பார்க்கலாம். இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ் மகன். ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னனால் அழைக்கப்பெற்று சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1936 முதல் 1947 வரை இலங்கையின் முதல் பிரசையாக முதனிலை வகித்த பெருந்தகையும் ஆவார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 473-480