ஆளுமை:தனபாலன், எஸ். எம்.
நூலகம் இல் இருந்து
பெயர் | தனபாலன் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தனபாலன், எஸ். எம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகங்கள் எழுதியுள்ளார். மயக்கங்கள், உனக்காக கண்ணே, பேசத் தெரிந்த ஊமைகள் போன்ற சிறுகதைகளையும் அந்தஸ்து, ஜீவராகங்கள், சுமைதாங்கி போன்ற நாடகங்களையும் எழுதிப் புகழ் பெற்றார்.
இவர் புங்குடுதீவுக் கலைஞர்களில் முதன் முதலாக வீடியோ திரைப்படத்தை எழுதித் தயாரித்தவர் என்ற புகழைக் கரைதேடும் அலைகள் என்ற திரைப்படத்தினூடாக ஈட்டிக்கொண்டார். இவர் 2006 ஆம் ஆண்டுக்கான புங்குடுதீவு பூவரசம் பொழுது விழாவுக்குத் தலைவராகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 249