பேச்சு:வித்தகம் ச. கந்தையபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

தமிழ் மன்றத்தின் கல்வித்துறைச் செய்திட்டக் குழுவின் 3வது வெளியீடு இதுவாகும். வித்தகம் சஞ்சிகையின் ஆசிரியரான தென் கோவைப் பண்டிதர் ச.கந்தையாபிள்ளை (25.08.1880-18.11.1958) அவர்களின் சுருக்க வரலாற்றுக் கட்டுரை இது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுச் சைவமும் தமிழும் பேணிக்காத்த ஒரு தலைமுறையில் இவர் குறிப்பிடத் தக்கவர்.


பதிப்பு விபரம்

வித்தகம் ச.கந்தையாபிள்ளை. பி.நடராசன் (செய்திட்டப் பொறுப்பாசிரியர்). தெல்லிப்பழை: தமிழ் மன்றம், கல்வித்துறைச் செய்திட்டக் குழு, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 20 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5x14 சமீ.