பேச்சு:இந்து நாகரிகத்திற் கலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

இந்தியப் பெருங்கண்டத்தில் சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்து வளர்ச்சிபெற்றுவந்த கலைகள் பற்றி ஆராயும் நூல். சமயம் சார்ந்தும், சமயம் சாராமலும் வளர்ச்சி பெற்ற இக்கலைகளில் இந்து நாகரிகத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சமயஞ்சார்ந்த கலைகள் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளதுடன், சமண, பௌத்த சமயத்தவர்களின் பங்களிப்பும் அவதானிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீகக்காலம் தொடங்கி, மௌரியர், குப்தர், சாளுக்கியர், ஹொய்சாளர், பல்லவர், சோழர். பாண்டியர், நாயக்கர் காலம் ஈறாக அனைத்துக்காலகட்டத்திலும் கலைகளில் ஏற்பட்ட வளர்ச்சியினையும் இந்நூல் விபரிக்கின்றது.


பதிப்பு விபரம்
இந்து நாகரீகத்திற் கலை. காரை. செ.சுந்தரம்பிள்ளை. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 2வது பதிப்பு, ஆவணி 2001, 1வது பதிப்பு, ஐப்பசி 1994. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி) x + 270 பக்கம், புகைப்படம், விலை: சாதாரண பதிப்பு, ரூபா 300. அளவு: 21 * 14 சமீ. (ISBN: சாதாரண பதிப்பு, 955 9429 06 ஓ, விஷேட பதிப்பு, 955 9429 13 2)


-நூல் தேட்டம் (# 1315)