பகுப்பு:மருதாணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மருதாணி சஞ்சிகையானது 1982 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இது அக்காலகட்டதில் யாழ் முஸ்லிம்களின் கருத்துக்களை இலக்கியக்கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு அளித்துள்ளது. இதனை மருதாணி கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. இதன் ஆரம்பகால ஆசிரியராக குறித்த அமைப்பின் அமைப்பாளர் ஜினூஸ் சுல்தான் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களில் ஜெஸ்மின் அன்சார் அவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இது ஆண்டுச் சிறப்பு மலர்களையும் கண்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக முஸ்லிம் சமூக அரசியல், ஆன்மிகம், இலக்கியம், இஸ்லாமிய நூல்கள், யாழில் முஸ்லிம்களின் செல்வாக்கு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மருதாணி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மருதாணி&oldid=493363" இருந்து மீள்விக்கப்பட்டது