பகுப்பு:புதிய தரிசனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதிய தரிசனம் இதழானது 2003 ஆம் ஆண்டு ஜூலை இல் வெளிவர ஆரம்பித்தது. இந்த இதழை த.அஜந்தகுமார் மாணவராக இருக்கும் போதே வெளியீடு செய்தார். இதன் ஆசிரியரும் அவரே. இணையாசிரியர்களாக பா. செந்தூரன், சு.க. சிந்துதாசன் மற்றும் கி.அ.தில்லைதாசன் ஆகியோர் காணப்படுகின்றனர். சமூகச்சீரழிவுகளுள் சிக்குண்டு சிதறுண்டு காணாமல் போகின்ற இளஞ்சமுதாயத்தினரை திசை திருப்பி "வாசிப்பே சுவாசிப்பு" என்ற தன்மையை மீண்டும் கொண்டு வரும் நோக்கில் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், அறிவியல், மாணவர்களுக்கான போட்டிகள், நேர்காணல்கள் என கலை இலக்கிய சமூக அறிவியல் ஏடாக இந்த இதழ் வெளியானது. இந்த இதழ் மாணவர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. இருப்பினும் 5 இதழ்களின் வருகையுடன் இந்த இதழ் தனது வருகையை நிறுத்தி கொண்டது.

"புதிய தரிசனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_தரிசனம்&oldid=540391" இருந்து மீள்விக்கப்பட்டது