நிறுவனம்: ஆசிரியர் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
நூலகம் இல் இருந்து
| பெயர் | ஆசிரியர் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
| வகை | கழகங்கள் |
| நாடு | - |
| மாவட்டம் | - |
| ஊர் | - |
| முகவரி | - |
| தொலைபேசி | {{{தொலைபேசி}}} |
| மின்னஞ்சல் | {{{மின்னஞ்சல்}}} |
| வலைத்தளம் | {{{வலைத்தளம்}}} |
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் கழமானது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் சேவையாற்றும் அனைத்து நிரந்தர ஆசிரியர்களை நிரந்தர அங்கத்தவர்களாகவும், ஏனைய ஆசிரியர்கள், கல்வி சார் ஊழியர்கள் ஆகியோரை கௌரவ அங்கத்தவர்களாகவும் கொண்டிருக்கின்றது. ஆசிரியர்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு , நல்லுறவு, கூட்டுமனப்பன்மை என்பவற்றை வளர்ப்பதும், ஆசிரியரது ஆளுமை விருத்திக்கு உதவுவதுமே இம் மன்றத்தின் நோக்கமாகும். ஆசிரியர் கழகமானது ஆரம்ப காலங்களில் ஆசிரியர் மன்றம் என இருந்து பின்னர்தான் ஆசிரியர் கழகமாக மாறியது. இம் மன்றத்தின் செயற்பாடுகளில் உதாரணங்களில் சில.
- இம் மன்ற அங்கத்தவர்களுடைய இன்ப துன்பங்களில் கலந்து கொண்டு ஆவன செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
- இம் மன்றமானது சேவையில் இருந்து இளைப்பாறுபவர்களையும் மாற்றலாகிச் செல்பவர்களையும் பதவி உயர்வு பெறுபவர்களையும் பாராட்டி கௌரவிப்பதிற் தவறியதில்லை.
- ஆண்டு தோறும் சட்டநாதர் கோயிலில் இக் கல்லூரி ஸ்தாபகர் திருமதி சிவகுருநாதன் விசாலாட்சி அம்மையாருக்கு நன்றி பாராட்டும் வகையில் இரண்டாம் திருவிழாவை செய்து வருவதுடன் திருக்கேதீஸ்வர ஆலயத் திருவிழாவிற்குனம் நிதியுதவி செய்து வருகின்றார்கள்.
- இம் மன்றமானது இலக்கை அடைவதற்கு அனைத்து அங்கத்துவர்களும் தம்மாலியன்ற ஒத்துழைப்பை நல்கி வந்துள்ளனர்.
- ஆசிரியர் கழகத்தினால் இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள்
- 2024 ஆம் ஆண்டின் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
- சிற்றுண்டியும் பரிசில்களும் (பேனா) வழங்கி மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
- ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சேவை நலன் பாராட்டி கௌரவித்தல்.
- இவ்வருடம் ஆசிரியர் சேவையில் 25 வருடங்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
- ஆசிரியர்களின் இன்ப துன்ப நிகழ்வுகளில் கலந்து உரிய பங்களிப்பு வழங்கப்பட்டது.
- இக் கல்லூரிக்கு மருத்துவ உதவி நாடி வந்தவர்களிக்கும் உதவி அழித்தமை.
- வெள்ள நிவாரண உதவியாக உடுபுடைவைகளையும் பண உதவியும் வழங்கி வந்துள்ளது.
- மானுட விடியல் கழகத்திற்கும் தினக்குரல் கருணைப் பாலத்திற்கும் இக் கழகம் நிதியுதவி வழங்கித் தனது சேவையைச் சிறப்புற நடாத்தியது.