ஆளுமை:வேதநாயகம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
பெயர் | வேதநாயகம்பிள்ளை |
பிறப்பு | 1865 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேதநாயகம்பிள்ளை (1865 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் 1885 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சென்று அரசடி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் போதனாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பின்னர் இவர் ஆசிரியத் தொழிலை விட்டு நீங்கி கிறீஸ்து மதப் போதகரானர். இவர் தீபம் என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையினைத் தாமே ஆசிரியராகவிருந்து நடாத்தினார். அதன்பின்னர் இலங்கை வர்த்தமானி என்னும் வார இதழின் ஆசிரியராக விளங்கினார். உரைநடையில் முன்னோடியாக விளங்கிய இவர், உழவர் சிறப்பு, மலேரியாக் கும்மி முதலான பாடல்கள் சிலவற்றைப் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 207