ஆளுமை:மீனா, சிவலிங்கம்

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:மீனா சிவலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வார்ப்புரு:ஆளும1

மீனா, சிவலிங்கம் யாழ்ப்பாணம், ஆனைபந்தியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடராஜா; தாய் மனோன்மணி. இவர் யாழ்ப்பாணம் வேம்படி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற ஆசிரியத் தகைமை பெற்றுள்ள வெளிவாரிப் பட்டதாரியாவார். இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்று ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து கவி, மீனா ஆகிய புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.

இவர் இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் பி.பி.சி. வானொலியில் நிலவுக்கு ஓர் சபதம் என்னும் பெயரில் கவிதைகளை எழுதியுள்ளதோடு ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மண், பூவரசு, தமிழ்நாதம் ஆகிய சஞ்சிகைகளுக்கும் ஆக்கங்களை எழுதியுள்ளார். பெண் விடுதலையைத் தனது குறிக்கோளாகக் கொண்டு எழுதி வரும் இவர், ஏறக்குறைய 500 கவிதைகளையும் 10 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 58-59
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மீனா,_சிவலிங்கம்&oldid=315797" இருந்து மீள்விக்கப்பட்டது