ஆளுமை:மீனாள், நித்தியானந்தன்
பெயர் | மீனாள், நித்தியானந்தன் |
தந்தை | - |
தாய் | - |
பிறப்பு | - |
ஊர் | - |
வகை | எழுத்தாளர், மருத்துவத் தாதி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மீனாள், நித்தியானந்தன் லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். லண்டனில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி வாசித்த கட்டுரையின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான இவர் அனுபவம் மிகுந்த மருத்துவத் தாதி ஆவார்.
அரபுமொழி, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியும் கொண்ட அவர் லண்டன் விமர்சனக் கூட்டங்களில் நூல் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளதோடு அரபு நாடுகளில் வேலை செய்த அவரது அனுபவங்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் ‘தாயும் சேயும்’ மருத்துவ நூல் குறித்த நுட்பமான விமர்சனமொன்றினையும் இவர் முன்வைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு லண்டன் ஏர்ல்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற நூல் கண்காட்சியில் நேரில் பார்த்து, இந்திய ஆங்கில எழுத்தாளர்களைச் சந்தித்து இவர் எழுதிய ‘லண்டன் நூல் கண்காட்சி சில மனப்பதிவுகள்’ என்ற கட்டுரை மிகச் சிறந்த விவரணக் கட்டுரையாகும்.