ஆளுமை:மயில்வாகனம், முருகேசு
நூலகம் இல் இருந்து
| பெயர் | மயில்வாகனம் |
| தந்தை | முருகேசு |
| தாய் | பார்வதி |
| பிறப்பு | 1900-10-05 |
| இறப்பு | 1990-01-19 |
| ஊர் | வேலணை |
| வகை | சமயப் பெரியார் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
மயில்வாகனம், முருகேசு (1900.10.05 - 1990.01.19) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த சமயப் பெரியார், ஆசிரியர். இவரது தந்தை முருகேசு; இவரது தாய் பார்வதி. இவர் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகப் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமுதவிழா நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் இவரால் எழுதப்பட்ட 'எனது பழைய சிந்தனைகள்' என்னும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கலைமாமணி, தாளலய ஞான பூபதி, கலைஞானத் தொண்டன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 222-225
- நூலக எண்: 15444 பக்கங்கள் 230