ஆளுமை:பொன்னம்பலம், கணபதி காங்கேசர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம்
தந்தை கணபதி காங்கேசர்
பிறப்பு 1901.11.08
ஊர் அல்வாய்
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், கணபதி காங்கேசர் (1901.11.08 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை கணபதி காங்கேசர். இவர் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும் கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்று உயர் கல்விக்காக இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று இயற்கை அறிவியற் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார்.

இவர் இலங்கையின் முதலாவது அரசாங்க சபைத் தேர்தல் 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற போது மன்னார்-முல்லைத்தீவுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லையாயினும், இது இவரது அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. இவர் இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் 1944, ஆகஸ்ட் 29 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியற் கட்சியைத் தொடக்கினார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். அவற்றுள் வடக்கில் காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலையும் வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலையும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.


வெளி இணைப்புக்கள்

பொன்னம்பலம், கணபதி காங்கேசர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்


வளங்கள்

  • நூலக எண்: 11850 பக்கங்கள் 61-62