ஆளுமை:பேரின்பநாதன், ஆ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரின்பநாதன்
பிறப்பு 1944
ஊர் புங்குடுதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரின்பநாதன், ஆ (1944 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்றார். மருத்துவப் பட்டங்களையும் முதுமாணிப் பட்டத்தையும் பெற்ற இவர், உள்ளகப் பயிற்சியை களுபோவில வைத்தியசாலையில் பெற்றார்.

இவர் 1970 ஆம் ஆண்டு பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் வைத்திய நலன் பேண் அதிகாரியாக முதல் நியமனம்பெற்றார். பின் அங்கொட முல்லேரியா வைத்தியசாலையில் மனநலம் நரம்பு நோய் சத்திர சிகிச்சையில் விசேட பயிற்சி பெற்று 1982 ஆம் ஆண்டு பரிபாலகராகப் பதவி உயர்வு பெற்று, ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றார். இவர் இலங்கையில் இந்திய அமைதிப் படை இருந்த போது இடம்பெற்ற யுத்தங்களில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்வதுமுள்ளார்.

இவர் புங்குடுதீவு மக்களின் நலன் கருதி அமிர்தம் கிளினிக் என்ற ஓய்வு நேர வைத்தியசாலையை நடாத்தினார். இவர் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் தனது மருத்துவமனையின் கிளைகளை அல்லைப்பிட்டியிலும் மண்டைதீவிலும் நிறுவி பொதுமக்களுக்கு வைத்திய சேவையாற்றியதுடன் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் சுகவாழ்வு என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். சரித்திரம் சம்பந்தமாகப் பல தேடல்களைச் செய்து வந்த இவர், இராவணன் காலத்திலிருந்து இயக்கர், நாகர் காலம் வரை இலங்கை திராவிட நாடாகத் திகழ்ந்தது என்பதற்கான பல சான்று நூல்களைத் தேடி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 228-229
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பேரின்பநாதன்,_ஆ.&oldid=196333" இருந்து மீள்விக்கப்பட்டது