ஆளுமை:புவனலோஜனி, நடராஜசிவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனலோஜனி, நடராஜசிவம்
தந்தை சங்கரவேலுப்பிள்ளை
தாய் பர்வதவர்த்தினி
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனலோஜனி, நடராஜசிவம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை சங்கரவேலுப்பிள்ளை; தாய் பர்வதவர்த்தினி. இவர் பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் இயல், இசை, நாடகத்துறையில் காட்டிய ஆர்வத்தால் 1966 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் தமிழ் வர்த்தகசேவை ஒலிபரப்பிற்கு முதற் பெண் அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சிரேஷ்ட அறிவிப்பாளராக இருந்த திரு எஸ்.பி.மயில்வாகனத்திடம் பயிற்சி பெற்றுத் தமிழ் வர்த்தக ஒலிபரப்பின் அடிப்படையான அமைப்பைப் புரிந்து கொண்டு இன்றுவரை வர்த்தக ஒலி பரப்புக்கான மொழிநடை, அதற்கான உச்சரிப்பு, அமைதி பயன்படும் உருவகங்கள் ஆகியவற்றைப் பேணிச் சுவை குன்றா விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். இவரால் பெண்களுக்கான சஞ்சிகை நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள் (இல்லறஜோதி, பெண் உலகம், பூவும் பொட்டும், மணிமலர்) பலவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 80