ஆளுமை:பத்மாலினி, பிரான்சிஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மாலினி
தந்தை பிரான்சிஸ்
பிறப்பு
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மாலினி, பிரான்சிஸ் யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகம்,கூத்து, இசைநாடகக் கலைஞர் ஆவார். பிரபல நாடகக் கலைரான யூட்கொலின் இவரது சகோதரராவார். இவர் தனது நான்கு வயதில் இருந்தே கூத்தில் ஈடுபட்டு வருகிறார். ”திருநீலகண்டன்” என்ற கூத்தில் ஞானப்பூ என்ற பெண்பிள்ளை பாத்திரம் ஏற்று நடித்ததின் ஊடாக கலைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். வீரகுமாரனின் சபதம், பிரகாசராசன் (முன் அரசன்), அரக்கன், பாம்பாட்டி, விக்கிரமாதித்தன், தியாகத்தழும்பு, சமர்க்களவீரன், சந்தியோகுமையோ போன்ற கூத்திலும், கயல்விழி, பூவுக்குள் பூகம்பம், புயலான தேசம், வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ஆகிய கற்பனை நாடகங்களிலும் நடித்துள்ளார்.