ஆளுமை:நேசரெட்னம், பாவிலு கிறிஸ்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நேசரெட்னம்
தந்தை பாவிலு கிறிஸ்து
பிறப்பு 1969.10.19
ஊர் முருங்கன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நேசரெட்னம், பாவிலு கிறிஸ்து (1969.10.19 - ) மன்னார், முருங்கனைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாசிரியர். இவரது தந்தை பாவிலு கிறிஸ்து. இவர் தமிழ்நேசன் என்னும் புனைபெயரில் பரிச்சயமானவர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் பங்குத் தந்தையாகவும் மறைமாவட்டத்தின் மறைத்தூதுப் பணிகள் ஆணைக்குழுவின் இயக்குனராகவும் பணியாற்றினார். இவர் 'மன்னா' மாதப்பத்திரிகைக்கு 2000 ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக இருந்து அதனை வளப்படுத்தி வருகின்றார். இவர் சமாதானத் தூதுவர் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 42-49


வெளி இணைப்புக்கள்