ஆளுமை:தூயகுமாரன், வேலாயுதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தூயகுமாரன்
தந்தை வேலாயுதபிள்ளை
தாய் கனகம்மா
பிறப்பு 1958.08.03
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தூயகுமாரன், வேலாயுதபிள்ளை (1958.08.03 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதபிள்ளை; தாய் கனகம்மா. இவர் பதின்னான்காவது வயதிலிருந்து இசைத்துறையில் ஈடுபடுவதுடன் ஆர்மோனியம், ஓகன், தபேலா, மிருதங்கம், கொங்கட்றம், ஒக்றபாட், உடுக்கை ஆகிய இசைக் கருவிகளை இசைக்கக்கூடியவர்.

சக்தி தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் நிகழ்வுகளில் பக்கவாத்தியக் கலைஞராகச் செயற்பட்ட இவர், பாரம்பரிய மேம்பாட்டுக் கழகத்தினர் கொழும்பு இராமகிருஸ்ண மண்டபம், டவர் மண்டபம், வவுனியா நகர சபை மண்டபம், திருகோணமலை ஆகிய இடங்களில் மேடையேற்றிய ஆட்ட நாட்டுக்கூத்துகளிற்கும் பக்க வாத்தியக் கலைஞராகச் செயற்பட்டுள்ளார். இவர் திருமறைக் கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சி, நாட்டுக் கூத்துக்கள், ஒலிப்பதிவு நாடா வெளியீடுகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் நல்லூர் பரி யாக்கோப்பு ஆலயத்தின் பாடகர் குழுவிலும் பங்காற்றியுள்ளார். தூயபோல் கழகத்தின் இயக்குனராக இருக்கும் இவர், அமைதியின் தெய்வம் குறுந்தட்டை வெளியிட்டுள்ளார்.

இவர் 2008 ஆம் ஆண்டு கொழும்புத்துறை சென்.ஜோசப் வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ்த்தின விழாவின் போது இசைஞான பூரணன் என்னும் பட்டம் வழங்கிப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் பல பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 130
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 110